கனடாவில் காணாமல் போல 16 வயது தமிழ் சிறுமியின் நிலை என்ன? பொலிசார் வெளியிட்ட அதிகாரபூர்வ தகவல்
கனடாவில் காணாமல் போன தமிழ் சிறுமி பத்திரமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
ரொறன்ரோவை சேர்ந்த தரணிதா ஹரிதரன் என்ற 16 வயது சிறுமி கடந்த 29ஆம் திகதி மாயமானார்.
அன்றைய தினம் பகல் 1 மணியளவில் அவர் கடைசியாக காணப்பட்ட நிலையில் பின்னர் காணாமல் போனார்.
தரணிதா ஹரிதரனின் உயரம், அவர் காணாமல் போன போது அணிந்திருந்த உடைகள் தொடர்பிலான தகவலையும் பொலிசார் வெளியிட்டு அவரை கண்டுபிடிக்க பொதுமக்களிடம் உதவியை கோரினர்.
இந்த நிலையில் தரணிதா ஹரிதரன் பத்திரமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் என பொலிசார் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் உதவிய பொதுமக்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளனர்.