டைட் பேண்ட் அணிந்ததற்காக கடுமையாக தண்டிக்கப்பட்ட மாணவி! பிரித்தானிய பள்ளியில் அதிர்ச்சி சம்பவம்
இங்கிலாந்தில் மிகவும் இறுக்கமான கால்சட்டை அணிந்ததற்காக 13 வயது பள்ளி மாணவி தனது பள்ளியால் தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் வில்ட்ஷயர் மாநிலத்தில் உள்ள ட்ரோவ்ரிட்ஜில் உள்ள The John of Gaunt பள்ளியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
மிரர் பத்திரிகையின் ஒரு அறிக்கையின்படி, இப்பள்ளியில் மாணவிகளுக்கு இப்படி தண்டனை வழங்கப்படுவது இது முதல் முறை அல்ல என கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட 13 வயது சிறுமியின் தாயான லூசி டேனியல்ஸ் (35), தனது மகளை பள்ளியில் தனிமைப்படுத்தி வைப்பதற்கு பள்ளியின் மீது கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் இது குறித்து பேசுகையில் "இது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. பள்ளி திறக்கப்பட்ட வேளையில் ஊரடங்கு என்பதால் அவளுக்கு புதிய உடை வாங்க என்னால் முடியவில்லை, அதனால் என் மகளுக்கு அந்த கால்ச்சட்டையை John of Gaunt பள்ளி தான் வழங்கியது. அது அவளுக்க இறுக்கமாக இருக்கிறது.
இன்று வரை அவள் அந்த கால்ச்சட்டையை தான் அணிகிறாள். அதர்காக இன்று வரை அவள் பள்ளியில் தனிமைப்படுத்தப்படுகிறார்.
ஒவ்வொரு ஆசிரியரும் ஒவ்வொரு கொள்கையை பின்பற்றுகின்றனர். ஒரு ஆசிரியர் இந்தகால்ச்சட்டை போதுமானது என கூறும்போது, ஒரு சில ஆசிரியர்கள் அதனை ஏற்க மறுத்து, எனது மகளை தனியாக அமர வைக்கின்றனர்" என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அதேபோல், 14 வயது மாணவி ஒருவரின் தாய் லூ க்ரோவர் (42), இதேபோல் தனது மகளும் கால்ச்சட்டை காரணமாக தனிமைப்படுத்தப்படுகிறார் என குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில், John of Gaunt பள்ளியின் இந்த செயல் மாணவிகளின் பெற்றோர்களிடையே கடும் கோபத்தை தூண்டியுள்ளது.