பிரித்தானியாவில் ஆயிரம் பேர் கூடியிருந்த கடற்கரையில் 15 வயது சிறுமிக்கு நடந்த துயர சம்பவம்! பொலிசார் வெளியிட்ட புகைப்படம்
பிரித்தானியாவில் கடற்கரையில் ஆயிரக்கணக்கானோர் இருக்கும் போது, 15 வயது சிறுமி பாலியல்பலாத்காரம் செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் Bournemouth கடற்கரையில், கடந்த 18-ஆம் திகதி மாலை உள்ளூர் நேரப்படி மாலை 4 மணியளவில் 15 வயது மதிக்கத்தகக் சிறுமி, தன் நண்பர்களுடன் கடலில் பந்தை வைத்து விளையாடிக் கொண்டிருந்த போது, பந்தானது நீருக்கு அருகில் இருக்கும் கடற்கரையில் சென்று விழுந்துள்ளது.
அப்போது அந்த சிறுமி, பந்தை எடுக்க சென்ற போது, அடையாளம் தெரியாத நபர் அந்த பந்தை எடுத்து கொடுக்க மறுத்துள்ளான். அதன் பின் பந்தை வாங்கியதும், சிறுமியிடம் பேச்சைக் கொடுத்த அந்த நபர், சிறுமியின் உடல் மீது கை வைத்துள்ளான்.
இதைத் தொடர்ந்து அவரை கடல் நீருக்குள் இழுத்துச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். அன்றைய நாள் தான் பிரித்தானியாவின் மிகவும் வெப்பமான நாளாக இருந்ததால், சுமார் ஆயிரம் பேர் கடற்கரையில் கூடியிருந்த நிலையில் இந்த பலாத்கார சம்பவம் அரங்கேறியுள்ளது.
சிறுமி வெகு நேரமாக வராததை அறிந்த அவருடைய நண்பர்கள் சென்ற போது, எல்லாம் முடிந்துவிட்டது. இதன் பின் சிறுமி, அழுது கொண்டே, அங்கிருக்கும் கழிப்பறைக்கு சென்றுள்ளார்.
அப்போதும் அந்த சிறுமியை பின் தொடர்ந்த நபர், அவருடைய போன் நம்பரை கேட்டுள்ளான். இதைக் கண்ட அவரின் நண்பர்கள் எச்சரித்து அனுப்பிய பின்பு, சிறுமி நடந்ததைக் கூறியுள்ளார்.
இது குறித்து அந்த சிறுமி கூறுகையில், சம்பவ தினத்தன்று என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லை.
முதலில் என் கையை தொட்டான், அதன் பின் என்னை அப்படியே நீருக்குள் இழுத்துச் சென்றுவிட்டான். நான் தனியாக இருந்ததால், எனக்கு என்ன செய்வது என்றே தெரிவில்லை, எனக்கு வெளியில் வரவே ஒரு வித அசிங்கமாக இருந்தது. எங்கு யாரேனும் பார்த்திருப்பார்களோ என்ற அச்சம் இருந்தது என்று வேதனையுடன் கூறியுள்ளார்.
தன்னை பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு 17 வயது எனவும் Dabby என்று அறிமுகம் செய்து கொண்ட அவன் Birmingham-ல் இருப்பதாக கூறினான். அவனை பார்த்த போது ஆசியாவை சேர்ந்தவனாக இருக்கலாம் என்று கூறியுள்ளார்.
Picture: Dorset Police/BNPS
இதையடுத்து சிறுமி கூறிய அங்க அடையாளங்களை வைத்து பொலிசார் ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். மேலும், துப்பறியும் ஆய்வாளர் Wayne Seymour கூறுகையில், இந்த மோசமான செயலில் ஈடுபட்ட நபரின் கூந்தல் கருமையாக இருந்துள்ளது.
இடது காதில் ஒரு காது வளையம் மற்றும் அவரது புருவம் வெட்டப்பட்டிருந்தது என்று கூறியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக சிறிய தகவலாக இருந்தால் கூட, பொலிசாருக்கு தெரிவிக்கும் படியும், அது விசாரணைக்கு மிகப் பெரிய உதவியாக இருக்கும் என்று கூறியுள்ளார்,
மேலும், அன்றைய தினம் பல ஆசிய ஆண்கள் கடற்கையில் இருந்த பெண்களின் Snapchat விவரங்களைக் கேட்க அணுகியுள்ளதும் தெரியவந்துள்ளது.