மாணவி ஹேமமாலினி மர்ம மரணம்! அதிர்வலையை கிளப்பிய சம்பவத்தில் சாமியார் கைது... வெளிவரும் பகீர் பின்னணி

arrest girl death Tamilnadu Godman
By Raju Feb 18, 2022 06:35 AM GMT
Report

தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மாணவி ஹேமமாலினி மர்ம மரணம் தொடர்பாக சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் பூண்டியை அடுத்த வெள்ளத்துக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் முனுசாமி. இவர் கடந்த 20 ஆண்டுகளாக அங்குள்ள கோவில் அருகே தங்கி அப்பகுதி மக்களுக்கு அருள் வாக்கு கூறி வருவதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், தாமரைபாக்கத்தை அடுத்த கொமக்கமேடு கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரின் மகள் ஹேமமாலினி ( 20) தனியார் பொறியியல் கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்துள்ளார். இவருக்கு தீராத வயிற்று வலி மற்றும் பிற உடல் பிரச்சினைகள் இருந்துள்ளது.

இந்த சூழலில் பூசாரி முனுசாமியை பற்றி கேள்விப்பட்டதும் மகளை குணப்படுத்திடலாம் என்ற நம்பிக்கையில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஹேமமாலினியை அவரது பெற்றோர் முனுசாமியிடம் அழைத்து சென்றுள்ளனர்.

அப்போது முனுசாமி ஹேமமாலினிக்கு தோஷம் இருப்பதாகவும் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் என்னுடனே தங்கி பூஜைகள் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார். இரவு நேர பூஜையிலும் கலந்து கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கும் என்றும் தெரிவித்துளளார்.

மேலும், அந்த நேரத்தில், பெரும்பாலான இளம்பெண்கள் திருமண வரன் வேண்டி முனுசாமியிடம் இரவு பகல் என வந்து ஆசிர்வாதம் பெற்று சென்றுள்ளனர். இதனை கவனித்ததாலோ என்னவோ ஹேமமாலினியை கடந்த ஒரு வருட காலமாக பல இரவு முனுசாமியின் பூஜை அறையிலேயே தங்க வைத்துள்ளனர்.

இதனிடையே, கல்லூரிக்கு சென்று வந்த ஹேமமாலினி அடிக்கடி இரவு பூஜையில் கலந்துகொள்வதற்காக முனுசாமியின் வீட்டில் தனது தங்கையுடன் சென்று தங்கி வந்துள்ளார். அண்மையில் நேரடி வகுப்புகள் தொடங்கியும் ஹேமமாலினி கல்லூரிக்கு செல்லாமல் முனுசாமியின் வீட்டிலேயே முடங்கியதாக கூறப்படுகிறது.

மாணவி ஹேமமாலினி மர்ம மரணம்! அதிர்வலையை கிளப்பிய சம்பவத்தில் சாமியார் கைது... வெளிவரும் பகீர் பின்னணி | Girl Student Dies Godman Arrested Tamilnadu

இந்த நிலையில், ஹேமமாலினி கடந்த இரு நாட்களுக்கு முன்பு பூஜைக்காக முனுசாமியின் வீட்டுக்கு தங்கையுடன் சென்றுள்ளார். அன்று இரவு ஹேமமாலியின் அத்தையும் அங்குள்ள கோவில் ஒன்றில் தங்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மறுநாள் காலை ஹேமமாலினி வாந்தி எடுத்துவிட்டு மூச்சி பேச்சின்றி மயங்கி விழுந்துள்ளார். உடனே ஹேமமாலினியின் அத்தை சாமியார் முனுசாமியிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார். ஆனால், முனுசாமி உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இரண்டு நேரம் கழித்து ஆட்டோ ரிக்ஷவை வரவழைத்து மாணவியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

மருத்துவ பரிசோதனையில் ஹேமமாலினி பூச்சி மருந்தை சாப்பிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஹேமமாலினி அங்கு சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.

இது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் தலைமறைவாக இருந்த சாமியார் முனுசாமியை கைது செய்துள்ளனர். அவரிடம் மாணவி எப்படி இறந்தார், தலைமறைவானது ஏன் மற்றும் ஆசிரமத்துக்கு வந்த மாணவியை வீட்டுக்கு அழைது சென்றது ஏன் என்பது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொலிஸ் விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையில் ஹேமமாலினி வழக்கில் தங்களுக்கு நியாயம் கிடைக்க சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீருடன் மாவட்ட ஆட்சியர் காலில் விழுந்து ஹேமமாலினி பெற்றோர் கதறி அழுதுள்ளது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாணவி ஹேமமாலினி மர்ம மரணம்! அதிர்வலையை கிளப்பிய சம்பவத்தில் சாமியார் கைது... வெளிவரும் பகீர் பின்னணி | Girl Student Dies Godman Arrested Tamilnadu

மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US