காதலர் தினத்தன்று 100 பீட்சாக்கள் மூலம் முன்னாள் காதலனை பழிவாங்கிய காதலி
தனது முன்னாள் காதலனை வித்தியாசமான முறையில் இளம்பெண் ஒருவர் பழிவாங்கிய சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.
பழிவாங்கிய இளம்பெண்
கடந்த 14-ம் திகதி இந்தியா முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டது. இதில், குருகிராமைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தன்னுடைய முன்னாள் காதலனை பழிவாங்குவதற்காக திட்டம் ஒன்றை போட்டுள்ளார்.
அச்சம்பவம் தான் தற்போது சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வருகிறது. அதாவது அந்த இளம்பெண் 100 பீட்சாக்களை ஒன்லைன் ஓர்டர் செய்துவிட்டு அதற்கான டெலிவரிக்கு காதலன் வீட்டின் முகவரியை கொடுத்துள்ளார்.
அதோடு, பீட்சாவுக்கான பணத்தை 'Cash-on delivery' முறையில் பெற்றுக்கொள்ளுமாறும் ஓர்டர் செய்துள்ளார்.
பின்னர், உணவு விநியோக ஊழியர்கள் 100 பீட்சாக்களை எடுத்துக்கொண்டு பெண்ணின் காதலன் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
ஆனால், அங்கு அவர் தான் எதையும் ஓர்டர் செய்யவில்லை என்று ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இந்த சம்பவம் இணையத்தில் பரவி நெட்டிசன்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |