புத்தகம், செய்தித்தாள் வாசிக்கும் மாணவர்களுக்கு இனி கூடுதல் மதிப்பெண்- அரசின் திட்டம்
புத்தகம் மற்றும் செய்தித்தாள் வாசிக்கும் மாணவர்களுக்கு கூடுதலாக கருணை மதிப்பெண்கள் வழங்க கேரள அரசு திட்டமிட்டுள்ளது.
மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்
தற்போது தொழில்நுட்பத்தின் அதீத பயன்பாடு காரணமாக பலரிடமும் வாசிப்பு பழக்கம் குறைந்துகொண்டே வருகிறது.
இந்நிலையில் கேரள அரசு, மாணவர்கள் மத்தியில் வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கும் விதமாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, வாசிப்பு பழக்கத்தை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்க கேரள அரசு திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக பள்ளி நேரத்தில் தனி வகுப்பு ஒதுக்கப்படும் என கேரள கல்வித்துறை அமைச்சர் சிவன் குட்டி தெரிவித்துள்ளார்.
இதில், 1 முதல் 4ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வாராந்திர உணர்வுகள் மூலம் வாசிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மேலும், 5 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செய்தித்தாள் வாசிப்பு போன்ற பயிற்சிகள் வழங்கப்படும்.
இந்த திட்டத்தை கொண்டுவரும் முன்பாக ஆசிரியர்களுக்கு போதிய பயிற்சி வழங்கப்படும் என்றும் கேரள கல்வித்துறை அமைச்சர் சிவன் குட்டி தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |