பிரித்தானியாவின் ஒரு பகுதியில் வாழும் ஒரு தரப்பினருக்கு 35 மில்லியன் பவுண்டுகள் நிதி உதவி
வேல்ஸ் நாட்டில் வாழும் சிறு தொழில் செய்வோருக்கு, அரசு 35 மில்லியன் பவுண்டுகள் நிதி உதவி செய்ய முடிவு செய்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக தொழில் பாதிக்கப்பட்ட வேல்ஸ் நாட்டில் வாழும் சிறு தொழில் செய்வோர் மீண்டு எழும் வகையில், அவர்களுக்கு அரசு 35 மில்லியன் பவுண்டுகள் நிதி உதவி செய்ய முடிவு செய்துள்ளது.
ஆனால், பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக தொழிலாளர் சந்தை மீள பல ஆண்டுகள் ஆகும் என வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
வேல்ஸ் பொருளாதாரத் துறை அமைச்சரான Vaughan Gething, இந்த நிதியுதவி, தொழில்கள் மீண்டெழவும், கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தவும் பயன்படுமென்றும், இதுபோக, இலக்கு சார்ந்த பயிற்சிக்காக மேலும் 10 மில்லியன் பவுண்டுகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பை சிறு தொழில் பிரதிநிதிகள் வரவேற்றுள்ளார்கள்.
இந்த நிதியுதவி, தொழில் வளர்ச்சிக்காகவும், உள்ளூர் அதிகாரிகள் மூலம் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்காகவும் வழங்கப்பட உள்ளது.
கொரோனா காலகட்டத்திலிருந்து வெளியேறுவோம் என்ற நம்பிக்கையில், இனி தொழில்கள் அதிக நம்பிக்கையுடன் முதலீடு செய்யலாம் என்பதை உறுதி செய்யும் விதத்தில் இந்த உதவியை வழங்குகிறோம் என்று கூறியுள்ளார் Mr Gething.
இந்த உதவியால் வேல்ஸிலுள்ள 1,000 தொழில்கள் பயனடையும் என தான் நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.