இந்திய அணிக்கு எதிராக ஓய்வுபெற்ற அச்சுறுத்தல் வீரர்! களமிறக்கும் அவுஸ்திரேலியா? வெளியான தகவல்
இந்தியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி, டி20 தொடரில் விளையாட உள்ள அணிகளில் அவுஸ்திரேலியா பல மாற்றங்களை உறுதிப்படுத்தியுள்ளது.
ஜாக் எட்வர்ட்ஸ்
அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய அணி, நாளை சிட்னியில் நடைபெற உள்ள கடைசி ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளது. 
இப்போட்டியில் விளையாட ஜாக் எட்வர்ட்ஸ் (Jack Edwards) தனது முதல் சர்வதேச அழைப்பைப் பெற்றுள்ளார்.
மேக்ஸ்வெல்
அதே சமயம் கிளென் மேக்ஸ்வெல் மற்றும் பென் டுவார்ஷுயிஸ் ஆகியோர், இந்தியாவுக்கு எதிரான கடைசி 3 டி20 போட்டிகளுக்குத் திரும்புவதற்குத் தகுதியானவர்களாகக் கருதப்படுகிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஒருநாள் கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்த கிளென் மேக்ஸ்வெல் (Glenn Maxwell) டி20 போட்டியில் விளையாட உள்ளது இந்திய அணி மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும். 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |