கோலியை கேப்டன் பதவியில் இருந்து தூக்கியது சரியான முடிவு! முன்னாள் வீரர் போட்ட டுவிட்டால் கடும் கோபத்தில் ரசிகர்கள்
இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான மைக்கல் வாகன், கோலியை கேப்டன் பதவியில் இருந்து தூக்கியது சரியான முடிவு என கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணியின் ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து கோலி அதிரடியாக நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக ரோகித்சர்மா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
இது கோலியின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
இதற்கு பிசிசிஐ தரப்போ நாங்கள் அவரை டி20 கேப்டன் பதவியில் இருந்து நீடிக்கும் படி கூறினோ, ஆனால் அவர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.
அதே சமயம் ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கு ஒரே கேப்டன் இருப்பது சரியானது என்பதன் காரணமாகவே இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான மைக்கல் வாகன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், கோஹ்லியின் கேப்டன் பதவி நீக்கம் ஒரு நல்ல முடிவு என்று குறிப்பிட்டுள்ளார். இதைக் கண்ட கோலியின் ரசிகர்கள் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
Very good decision 👍 https://t.co/MD9WzFOc5t
— Michael Vaughan (@MichaelVaughan) December 8, 2021