ஜேர்மனியில் வாழும் பல மில்லியன் குடும்பங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி
ஜேர்மனியில், வீடுகளுக்கான ஆற்றல் கட்டணங்கள் குறைய இருக்கின்றன என்னும் மகிழ்ச்சியை அளிக்கும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
பல மில்லியன் குடும்பங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி
கடந்த சில வருடங்களாக தொடர்ந்து ஆற்றல் கட்டணங்கள் அதிகரித்துவந்த நிலையில், பல மில்லியன் குடும்பங்களுக்கு ஆறுதலை அளிக்கும் வகையில், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் ஆற்றல் கட்டணங்கள் குறைய இருப்பதாக ஆற்றல் விநியோக நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
அடுத்த இரண்டு மாதங்களுக்கு, ஜேர்மனியில் மின்சாரம் மற்றும் எரிவாயு வழங்கும் பல நிறுவனங்கள் கட்டணங்களை குறைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
POLITICO.eu
2022 வரை ரஷ்யாவிலிருந்து வரும் எரிவாயுவை பெருமளவில் நம்பிக்கொண்டிருந்த ஜேர்மனி, பின்னர், ஆற்றல் சேமிப்பு மூலமும், நார்வே, அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாட்களிடமிருந்து எரிவாயு முதலான மூலங்களைப் பெற்றதாலும், தற்போது ஜேர்மனியிடம் போதுமான எரிவாயு சேமிப்பில் உள்ளது.
எரிவாயு போதுமான அளவில் இருப்பதாலும், பணவீக்கம் குறைந்துள்ளதாலும், பல நிறுவனங்கள் குறைந்த விலைக்கு தங்களுக்கு எரிவாயு கிடப்பதால், அவை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு விலைகுறைப்பு செய்துள்ளன.
மின் கட்டணம் குறைப்பு
மேலும், 83 மின் வழங்கல் நிறுவனங்கள் சராசரியாக 12 சதவிகிதம் கட்டணக் குறைப்பு செய்வதாக அறிவித்துள்ளன. இதனால், மக்களுக்கு மின்கட்டணம் ஒரு கிலோவாட் மணி மின்சாரத்துக்கு, 46 சென்ட்களாக ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
100 எரிவாயு நிறுவனங்கள் விலை குறைக்க உள்ளன
கிட்டத்தட்ட 100 எரிவாயு நிறுவனங்கள் எரிவாயு விலையை குறைக்க உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. சராசரியாக, எரிவாயு விலை 15 சதவிகிதம் குறைய வாய்ப்புள்ளது. மொத்தத்தில், பொதுமக்களுக்கு ஆறுதலான ஒரு செய்தியாக இது அமைந்துள்ளது என்பதில் சந்தேகமில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |