ஜேர்மனி தரப்பிலிருந்து திறன்மிகுப் பணியாளர்களுக்கு மீண்டும் ஒரு நல்ல செய்தி
திறன்மிகுப் பணியாளர்கள், பணி செய்வதற்காக விரைவில் ஜேர்மனிக்கு வருவதற்கான நடவடிக்கைகளை எடுத்துவருவதாக ஜேர்மன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தடைகள் விரைவில் நீக்கப்படும்
ஜேர்மன் பெடரல் அரசின் கூற்றுப்படி, திறன்மிகுப் பணியாளர் புலம்பெயர்தல் சட்டம் அமுலுக்கு வந்தவுடன், அவர்கள் ஜேர்மனி வருவதற்கான தடைகள் அகற்றப்படும் என்றும், திறன்மிகுப் பணியாளர்கள் முன்போல எக்கச்சக்கமான விதிகளைப் பின்பற்றவேண்டி இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திறன்மிகுப் பணியாளர்களுக்கான விதிகளை தளர்த்தும் நாட்டின் திட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்த ஜேர்மன் உள்துறை அமைச்சரான Nancy Faeser, திறன்மிகுப் பணியாளர்கள் பணி நிமித்தமாக ஜேர்மனிக்கு வருவதை அரசு எளிதாக்க விரும்புவதாக கூறியுள்ளார்.
நாட்டில் நிலவும் பணியாளர் தட்டுப்பாடு
ஜேர்மனியில் தற்போது பல்வேறு துறைகளில் பணியாளர் பற்றாக்குறையை நிலவுவதால், எவ்வளவு திறன்மிகுப் பணியாளர்களை ஈர்க்க முடியுமோ, அவ்வளவு பேரை ஜேர்மனிக்கு வரவழைக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
திறன்மிகுப் பணியாளர் புலம்பெயர்தல் சட்டத்தின்படி, திறன்மிகுப் பணியாளர் மூன்று வழிகளில் ஜேர்மனிக்கு வரமுடியும்.
முதலாவது, ஜேர்மனியில் தகவல் தொழில்நுட்ப நிபுணர்களுக்கு அதிக தேவை இருப்பதால், தகுதி அடிப்படையில் அவர்கள் ஐரோப்பிய ஒன்றிய நீல அட்டையுடன் நாட்டிற்கு வருவது.
இரண்டாவது, அனுபவத்தின் மூலமாக ஜேர்மனிக்கு வருவது. ஜேர்மன் அதிகாரிகளின் கூற்றுப்படி, குறைந்தது இரண்டு வருட தொழில்முறை அனுபவம் உள்ள அனைத்து வெளிநாட்டினரும், வெளிநாட்டில் பெற்ற அங்கீகரிக்கப்பட்ட கல்வித் தகுதியுடன் ஜேர்மனிக்கு வருவது.
மூன்றாவது, தொழில் திறமை. ஜேர்மனி, வாய்ப்பு அட்டை என்று அழைக்கப்படும் ஒரு அட்டையை அறிமுகப்படுத்துகிறது . இந்த அட்டையானது வெளிநாட்டினர் ஜேர்மனிக்கு வந்து, வேலை தேடும் நோக்கத்துடன் ஒரு வருடம் வரை ஜேர்மனியில் தங்கியிருக்க அனுமதிக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |