கடந்த 24 மணி நேரத்தில்... சுவிட்சர்லாந்தில் ஒரு மகிழ்ச்சியான செய்தி
சுவிட்சர்லாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் கூட கொரோனாவுக்கு பலியாகவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
சுவிட்சர்லாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் கூட கொரோனாவால் உயிரிழக்கவில்லை என பெடரல் சுகாதார அலுவலகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
சுவிட்சர்லாந்தில் திங்ககிழமையன்று 9 பேர் கொரோனாவால் உயிரிழந்தார்கள், அந்த எண்ணிக்கை செவ்வாயன்று 6 ஆக குறைந்தது. நேற்றோ ஒருவர் கூட பலியாகவில்லை.
ஆனால், புதிதாக 717பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார்கள், அவர்களில் 22
பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இருந்தாலும், கடந்த வாரத்தை
ஒப்பிடும்போது, இந்த எண்ணிக்கையும் குறைவுதான் என்பது குறிப்பிடத்தக்கது.