கூகுள் CEO...தமிழன் சுந்தர் பிச்சையையே பொறாமைப் பட வைத்த அமேசான் நிறுவனர்: எதற்காக தெரியுமா?
கூகுள் நிறுவனத்தின் சிஇஓ-வான சுந்தர் பிச்சை அமேசான் நிறுவனர் ஜெப் பெஸோஸ் பார்த்து கொஞ்சம் பொறாமைப்படுவதாக கூறியுள்ளார்.
தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட சுந்தர் பிச்சை, தற்போது கூகுள் நிறுவனத்தின் CEO-வாக உள்ளார். இந்நிலையில், அமேசான் நிறுவனரான ஜெப் பெஸோஸ்ஸின் விண்வெளிப் பயணம் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது.
அப்போது, அவரது விண்வெளிப் பயணத்தைப் பார்த்து நான் கொஞ்சம் பொறாமைப்படுகிறேன். எனக்கும் விண்வெளியிலிருந்து பூமி எப்படிச் சுழல்கிறது என்பதைப் பார்க்க ஆசை என்று கூறியுள்ளார்.
அமேசான் நிறுவனரான ஜெப் பெஸோஸ், ப்ளூ ஆரிஜின் என்கிற தனியார் விண்வெளிப் பயணம் மற்றும் விண்கலங்கள் தயாரிப்பு நிறுவனத்தைத் துவங்கியுள்ளார்.
இதில் தயாரான, மனிதர்கள் பயணப்படக்கூடிய முதல் விண்கலத்தில், ஜெப் பெஸோஸும் அவரது சகோதரர் மார்க் பெஸோஸும் வரும் 20-ஆம் திகதி விண்வெளிக்குப் பயணப்படவுள்ளனர்.
பூமியின் வளிமண்டலத்துக்கும் விண்வெளிக்குமான எல்லைக்கோடு என்று கூறப்படும் கார்மன் கோடு வரை கிட்டத்தட்ட 3,28,000 அடி இந்த விண்கலம் பயணப்படவுள்ளது.
ஜூலை 20-ஆம் திகதி நாசாவின் அபோல்லோ விண்கலம் நிலவில் தரையிறங்கிய தினம் என்பதால் அந்த தினத்தை பெஸோஸ் தெரிவு செய்துள்ளார்ர.
ப்ளூ ஆரிஜின் நிறுவனத்துக்குச் சொந்தமாக மேற்கு டெக்ஸாஸில் இருக்கும் ஏவுதளத்திலிருந்து இந்த விண்கலம் ஏவப்படவுள்ளது.
பெஸோஸ் பயணப்படவிருக்கும் இந்த விண்கலத்தில் ஆறு பேர் பயணப்படலாம். அதில் ஒரு இருக்கைக்கான ஏலம் விடப்பட்டு அது கிட்டத்தட்ட 30 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை விலை பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.