ரூ.1.78 கோடி விவகாரம்: ஊழல் வழக்கிலிருந்து கோத்தபய ராஜபக்சே விடுவிப்பு
இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே மாளிகையில் இருந்து கண்டெடுக்கப்பட்ட ரூ.1.78 கோடி ஊழலில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.
போராட்டம்
இலங்கையில் கடந்த ஆண்டு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அதனால் அங்கு உணவு, பெட்ரோல், டீசல், தானியங்கள் ஆகியவற்றிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டது மட்டுமல்லாமல், பல மணி நேரம் மின்வெட்டும் ஏற்பட்டது.
இதனால், அப்போதய இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகிய இருவரும் பதவி விலக வேண்டும் என்று அங்குள்ள மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
அப்போது, கடந்த ஆண்டு ஜூலை 9 -ம் திகதி போராட்டத்தின் விளைவாக அதிபர் மாளிகைக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த ரூ.1.78 கோடி பணத்தை கண்டெடுத்தனர்.
விடுவிப்பு
இதனைத்தொடர்ந்து அந்த பணத்தை பொலிசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர், கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக ஊழல் விசாரணை நடத்த சிறப்பு ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் வழக்குப்பதிவு செய்து தனது விசாரணையை தொடங்கியது.
இந்த வழக்கின் விசாரணை கொழும்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அப்போது, அந்த பணம் தன்னுடையது என்றும், அதை திருப்பி தரும்படியும் கோத்தபய ராஜபக்சே வாதிட்டார்.
இதில், கோத்தபய ராஜபட்ச மீதான குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் இல்லாததால் வழக்கை கைவிடுவதாக கொழும்பு நீதிமன்றத்தில் இலங்கை ஊழல் தடுப்பு ஆணையம் தெரிவித்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |