அமெரிக்காவில் குடியேறும் கோத்தாபய ராஜபக்ச?
தன்னுடைய மனைவியுடன் அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற கோத்தபய ராஜபக்ச முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவியத்தை தொடர்ந்து மக்கள் போராட்டம் வெடித்தது.
நாளுக்கு நாள் போராட்டம் தீவிரமானதை தொடர்ந்து, அப்போதைய ஜனாதிபதியாக இருந்த கோத்தாபய ராஜபக்ச மனைவியுடன் மாலத்தீவுக்கு தப்பியோடினார்.
பின்னர் சிங்கப்பூருக்கு சென்ற அவர் தற்போது தாய்லாந்து நாட்டில் தஞ்சம் அடைந்து உள்ளார்.
அவர் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள ஹொட்டல் அறை ஒன்றில் தங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
அவர் விரைவில் தாய்லாந்தில் இருந்து இலங்கை திரும்ப இருப்பதாக அவரது உறவினர் உதயங்க வீர துங்கா தெரிவித்தார்.
இதற்கிடையே இலங்கை வந்தால் பாதுகாப்பு இருக்காது என்பதால் அமெரிக்காவில் குடியேற முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்காக அவர் கிரீன்கார்டு கேட்டு கடந்த மாதமே தனது வக்கீல் மூலம் ஏற்பாடுகளை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.