ஏர் இந்தியா விமான விபத்து; விமானி இருக்கையில் ஏற்பட்ட கோளாறு காரணமா? அரசு விளக்கம்
ஏர் இந்தியா விமான விபத்துக்கான காரணம் குறித்து வெளியான தகவலுக்கு மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
ஏர் இந்தியா விமான விபத்து
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து கடந்த ஜூன் 13 ஆம் திகதி லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில், மேகானி நகரில் இருந்த பிஜே மருத்துவக் கல்லூரி விடுதியின் கட்டடத்தில் விழுந்து விபத்தை சந்தித்தது.
இந்த விமானத்தில், பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் உட்பட 242 பேர் பயணித்த நிலையில், ஒருவர் மட்டும் உயிர் பிழைக்க குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட 241 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்துக்கான காரணம், குறித்து மத்திய அரசு தீவிர விசாரணை நடத்தி வருகிறது. விமானத்தின் கருப்பு பெட்டியை அமெரிக்காவிற்கு அனுப்பி, அதன் விவரங்கள் கோரப்பட்டுள்ளது.
ஏர் இந்தியாவின் வருகை பதிவேடு, பணிப்பதிவேடு, செயல்பாட்டு அறிக்கை உள்ளிட்டவைகளை ஆய்வு செய்ததில் பல விதி மீறல்கள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, 3 அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
விமானி இருக்கையில் கோளாறு
இந்நிலையில், விபத்திற்கு காரணம் விமானியின் இருக்கையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுதான் என்ற தகவல் சமூகவலைத்தளத்தில் பரவி வந்தது.
அதில், விமானம் ஓடுதளத்தில் இருந்து Take Off ஆகி பறக்க தொடங்கியதும், விமானியின் இருக்கை Lock ஆகாமல் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
Take Off ஆன சில நொடிகளிலேயே ஐடியல் நிலையை அடைந்ததால், என்ஜினின் வேகம் உடனடியாக குறைந்ததையடுத்து, சக விமானி, விமானம் பறப்பதை கட்டுப்படுத்தும் கருவியை தனது கன்ட்ரோலில் எடுக்க முயன்றுள்ளார்.
அதில் தோல்வியைத் தழுவியதால், அடுத்த சில நொடிகளுக்குள் விமானம் மருத்துவக் கல்லூரியின் கட்டிடத்தின் மீது விழுந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, விமானி உரையாடியது கருப்பு பெட்டியில் பதிவாகியிருந்ததாக கூறப்பட்டுள்ளது.
இந்த தகவல் தீவிரமாக பரவி வரும் நிலையில், மத்திய அரசின் உண்மை சரிபார்ப்பகம் இந்த தகவலை முற்றிலுமாக மறுத்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |