சிறப்பு நினைவு நாணயங்களை வெளியிட்டுள்ள இந்திய அரசு.., எப்படி ஓர்டர் செய்வது?
ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கம் (ஆர்எஸ்எஸ்) நிறுவப்பட்டதன் 100வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இந்திய அரசு சிறப்பு நினைவு நாணயங்கள் மற்றும் தபால் தலைகளை வெளியிட்டுள்ளது.
சிறப்பு நாணயங்கள்
இந்த நாணயங்கள் மற்றும் தபால் தலைகள் ஆர்எஸ்எஸ்ஸின் நூற்றாண்டு சேவை, ஒற்றுமை மற்றும் அர்ப்பணிப்புக்கு அர்ப்பணிக்கப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
சிறப்பு நினைவு நாணயங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த நாணயங்களை கொல்கத்தா நாணயச்சாலையின் வலைத்தளத்தில் ( https://indiagovtmint.in/hi/product-category/kolkata-mint) காணலாம். நாடு முழுவதும் உள்ள தபால் தலை அலுவலகங்களில் நினைவு முத்திரைகளை வாங்கலாம்.
பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 1 ஆம் தேதி சிறப்பாக வடிவமைக்கப்பட்ட நாணயங்கள் மற்றும் தபால் தலைகளை வெளியிட்டார்.
இந்த நினைவு நாள் ஆர்.எஸ்.எஸ்ஸின் பயணத்தை மட்டுமல்ல, தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான அதன் பங்களிப்பையும் குறிக்கிறது என்று அவர் நிகழ்ச்சியில் கூறினார்.
To commemorate 100 years of the foundation of the Rashtriya Swayamsevak Sangh, the Government of India has released special commemorative coins and stamps, honouring a century of service, unity and dedication.
— Nirmala Sitharaman Office (@nsitharamanoffc) October 10, 2025
The special commemorative coins can be ordered online via Kolkata… pic.twitter.com/dhVRJ7SKic
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |