இதை செய்ய மறுத்தால் வீடுகளுக்கு LPG நிறுத்தப்படும் - மத்திய அரசு உத்தரவு
மத்திய கிழக்கு போர் காரணமாக உலகின் பல்வேறு பகுதிகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு, பல நாடுகள் ஊழியர்களை வீட்டில் இருந்து பணி புரிய அறிவுறுத்தியுள்ளது.
இதே போல், இந்தியாவிலும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால், பல உணவகங்கள் மூடப்பட்டுள்ளது.
LPG நிறுத்தப்படும் என எச்சரிக்கும் அரசு
இந்நிலையில், PNG இணைப்பு உள்ள இடங்களில், நுகர்வோர் குழாய்வழி இயற்கை எரிவாயுவிற்கு மாறாவிட்டால், வீடுகளுக்கான சமையல் எரிவாயு (LPG) விநியோகம் நிறுத்தப்படும் என மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்தியாவின் எரிவாயு விநியோக வலையமைப்பை விரிவுபடுத்துவதை விரைவுபடுத்துவதையும், ஒரே எரிபொருளைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதையும் நோக்கமாக கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஏற்கனவே PNG விநியோகத்திற்கான குழாய் வசதி இருந்தபோதிலும், நுகர்வோர் PNG மாற மறுத்தால், 3 மாதங்களுக்குப் பிறகு எல்பிஜி (LPG) விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகர்ப்புற வீடுகளை உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மற்றும் பல்வகைப்படுத்தப்பட்ட PNGக்கு மாற்றுவதன் மூலம், PNG குழாய்வழி அணுகல் இல்லாத கிராமப்புறங்களுக்கு கையிருப்பில் உள்ள LPGக்களை வழங்கி தட்டுப்பாட்டை சரி செய்ய முடியும்.
குழாய் இணைப்பு வழங்குவது தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமற்றது என அங்கீகரிக்கப்பட்ட எரிவாயு விநியோக நிறுவனம் தடையில்லாத சான்றிதழ்(NOC) வழங்கினால் எல்பிஜி விநியோகம் நிறுத்தப்படாது.
வணிகம் செய்வதை எளிதாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த சீர்திருத்தங்கள் "ஒரு நெருக்கடி ஒரு வாய்ப்பாக மாற்றப்பட்டுள்ளது" என்று கூறி, இந்த மாற்றத்தை ஒரு மூலோபய திருப்பு முனை என எண்ணெய் துறை செயலாளர் நீரஜ் மிட்டல் தெரிவித்துள்ளார்.
With guidance of @PMOIndia and @HardeepSPuri the Natural Gas infrastructure - PNG and CNG gets major ease of doing business reforms - witness rapid expansion of CGD network across the country - a crisis turned into an opportunity @gailindia @PNGRB_ pic.twitter.com/btcnKrDt6j
— Neeraj Mittal IAS (@neerajmittalias) March 24, 2026
பொது அதிகார அமைப்புகள், கண்டிப்பாக நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் வழித்தடத்திற்கான அனுமதிகளை வழங்க வேண்டும். அவர்கள் அவ்வாறு செய்யத் தவறினால், ஒப்புதல் வழங்கப்பட்டதாகவே கருதப்படும். இதற்காக கூடுதல் கட்டணங்கள் வசூலிக்க கூடாது.
அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் 4 மாதங்களுக்குள் குழாய் பதிக்கும் பணியைத் தொடங்க வேண்டும். தவறினால், பிரத்தியேக உரிமையை இழப்பது உட்பட அபராதங்கள் விதிக்கப்படலாம்.
குடியிருப்புப் பகுதிகளில், வீட்டுவசதி சங்கங்கள் போன்ற அணுகலைக் கட்டுப்படுத்தும் அமைப்புகள் 3 வேலை நாட்களுக்குள் குழாய் அமைப்பதற்கானஅனுமதிகளை வழங்க வேண்டும். மேலும் 48 மணி நேரத்திற்குள் இறுதிக்கட்ட PNG இணைப்பு வழங்கப்பட வேண்டும். அத்தகைய பகுதிகளில் முறையான காரணங்கள் இன்றி குழாய்வழி இணைப்புக்கான விண்ணப்பங்களை நிராகரிக்க முடியாது.
நிலப் பயன்பாட்டுத் தகராறுகளைத் தீர்ப்பதற்கும், வழித்தட உரிமையை அமல்படுத்துவதற்கும், நியமிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு ஒரு உரிமையியல் நீதிமன்றத்திற்கு இணையான அதிகாரம் வழங்கப்படும்.
ஒப்புதல்கள், நிராகரிப்புகள் மற்றும் இணக்கத்தைக் கண்காணிப்பது உட்பட, செயலாக்கத்தைக் கண்காணிப்பதற்கான ஒருங்கிணைப்பு முகமையாக பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியம் (PNGRB) நியமிக்கப்பட்டுள்ளது.
குழாய் வழியாக எரிபொருள் விநியோகம் பெறும் போது, சிலிண்டர் நிரப்புவதற்காக முன்பதிவு செய்து காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |