பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய சிக்கல்! பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என தகவல்
பிரித்தானியாவில் லொறி டிரைவர்கள் பற்றாக்குறையால், காய்ச்சல் தடுப்பூசிகள் கிடைக்க மேலும் இரண்டு வாரங்கள் ஆகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் பிரெக்ஸிட் மற்றும் கொரோனா பெருந்தொற்று காரணமாக பல ஐரோப்பிய கனரக வாகன ஓட்டுநர்கள் தங்கள் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், அவர்கள் தங்கள் பணிக்கு திரும்புவதில் 15 நாட்கள் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால், பிரித்தனையாவில் HGV ஓட்டுனர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டதுள்ளதால், காய்ச்சல் தடுப்பூசிகள் கிடைக்க மேலும் இரண்டு வாரங்கள் ஆகலாம் என அனைத்து பொது மருத்துவமனைகளிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த இரண்டு வாரகால தாமதத்தின் விளைவாக, பிரித்தானியாவில் இந்த குளிர்காலத்தில் சளி, காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என மருத்துவ நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
உலகின் மிகப்பெரிய காய்ச்சல் தடுப்பூசி நிறுவனங்களில் ஒன்றான Seqirus, தடுப்பு மருந்துகளை விநியோகிப்பதில் ஒரு பதினைந்து நாட்கள் வரை தாமதமாக இருப்பதாக அறிவித்தது.
முன்னதாக, கோகா கோலா, மெக்டொனால்ட்ஸ் மற்றும் வெதர்ஸ்பூன் போன்ற முக்கிய உணவு நிறுவனங்கள் பிரெக்ஸிட் மற்றும் கொரோனா பெருந்தொற்று காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியது குறிப்பிடத்தக்கது.