நடந்து முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை - பெறுபேறு வெளியாகும் திகதி குறித்து வெளியான தகவல்
நேற்று நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகும் திகதி குறித்து பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை நாடு முழுவதிலும் உள்ள பரீட்சை நிலையங்களில் நேற்று (15) காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகியது.
இந்த ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு மொத்தம் 323,879 பரீட்சாத்திகள் தோற்றியிருந்ததாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் 2,849 நிலையங்களில் பரீட்சை நடைபெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
புலமைப்பரிசில் பரீட்சைக்கு முன்னரும் பின்னரும் பிள்ளைகளின் மனநலம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டுமென மனநல நிபுணரும் உளவியலாளருமான டொக்டர் ரூமி ரூபன் தெரிவித்தார்.
இந்நிலையில் நேற்று (15) நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இன்னும் 40 நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |