தாத்தாவால் பேத்திக்கு பிறந்த குழந்தை! கொடூரத்துக்கு துணை போன மூன்று பெண்கள்... புதைக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம்
தமிழகத்தில் 70 வயது தாத்தாவால் பேத்தி குழந்தை பெற்றெடுத்த சம்பவத்தின் அதிர்ச்சி பின்னணி வெளியாகியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் செல்லங்குப்பத்தை சேர்ந்தவர் முனியாண்டி. இவர் பேத்தியை ஆசை வார்த்தை கூறி பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனால் பேத்தி கர்ப்பம் ஆகியிருக்கிறார்.
திடீரென்று பேத்தியின் வயிறு பெரிதாக இருந்ததால் அவரை அழைத்து கொண்டு அதே பகுதியை சேர்ந்த இந்திரானியிடம் அழைத்துக்கொண்டு சென்றிருக்கிறார். அவர் ஓய்வுபெற்ற நர்ஸ் ராஜாமணியிடம் அழைத்து செல்ல, கருக்கலைப்பு நடந்திருக்கிறது. இதில் குழந்தை இறந்து பிறந்திருக்கிறது.
இறந்த குழந்தையை தென் பெண்ணை ஆற்றில் புதைத்துவிட்டார் தாத்தா முனியாண்டி. ஆனாலும் இந்த தகவல் ஊர் முழுவதும் பரவிவிட்டது. இதையடுத்து விஏஓ திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகாரளித்துவிட்டார்.
முனியாண்டி, ராஜாமணி, இந்திராணி ஆகியோர் மீது 4 பிரிவுகளின் போக்சோ வழக்கு பதிவு செய்தனர் பொலிசார். இதில் ராஜாமணி மீது வழக்குபதிவு செய்யாமல் இருக்க 23 ஆயிரத்து 500 ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதால் ராஜாமணி மீது வழக்கு பதிவு செய்யாமல் இருந்தனர்.
இந்த விவகாரம் வெளியே தெரிந்ததை அடுத்து திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் ஆய்வாளர் இளவழகி, தலைமை காவலர் கீதாரணி, முதல்நிலை காவலர் கோகிலா ஆகியோரை ஆயுதடைப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார் காவல் கண்காணிப்பாளர்.
மேலும் கீதாராணி, கோகிலா ஆகியோரை பணிடை நீக்கம் செய்துள்ளனர், அவர்கள் மீது மேலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.