ரூ.100 கோடிக்கும் மேல் தானம் செய்த தாத்தாவை 73 இடங்களில் கத்தியால் குத்தி கொலை செய்த பேரன்
ரூ.100 கோடிக்கும் மேல் தானம் செய்த தொழிலதிபரை, அவரது பேரன் சொத்து தகராறு காரணமாக கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளார்.
தாத்தாவை கொலை செய்த பேரன்
இந்திய தலைநகர் தெலங்கானா, ஹைதராபாத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஜனார்தன ராவ் (88). சுமார் ரூ.500 கோடி சொத்துக்கள் கொண்ட இவர், இதுவரை ரூ.100 கோடிக்கும் மேல் தானம் செய்துள்ளார்.
இவர், மருத்துவமனைகளில் புற்றுநோய் சிகிச்சை மையம், இதய நோய் சிகிச்சை மையங்கள் அமைக்க நன்கொடை வழங்கியுள்ளார். அதுமட்டுமல்லாமல், திருப்பதி தேவஸ்தானத்திற்கு பல கோடிகளை வழங்கியுள்ளார்.
இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகளின் மகன் ஸ்ரீ கிருஷ்ணாவை தன்னுடைய நிறுவனத்தின் இயக்குனராக ஜனார்தன ராவ் நியமனம் செய்துள்ளார். இதனால், அவருடைய இரு மகள்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இந்நிலையில் கடந்த 6-ம் திகதி அன்று 2-வது மகள் சரோஜினி தேவி மற்றும் அவருடைய மகன் கீர்த்தி தேஜ் (28) ஆகிய இருவரும் ஜனார்தன ராவின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு தாத்தா ஜனார்தன ராவும், பேரன் கீர்த்தி தேஜும் பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது அவர்கள், ஸ்ரீ கிருஷ்ணாவை நிறுவனத்தில் நியமனம் செய்தது மற்றும் சொத்து பிரிப்பது தொடர்பாக பேசிக்கொண்டிருந்தனர்.
பின்னர், அவர்களது வாக்குவாதம் முற்றி ஆத்திரத்தில் தாத்தாவை அவரது பேரன் கீர்த்தி தேஜ் கொடூரமாக கத்தியால் தாக்கினார்.
இதில், 73 இடங்களில் கத்திக் குத்தால் காயமடைந்த ஜனார்தன ராவ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அப்போது, சமையல் அறையில் இருந்த சரோஜினி தேவி ஓடி வந்து தந்தையின் உடலை பார்த்து கதறி அழுதார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் கடந்த 8-ம் திகதி கீர்த்தி தேஜை கைது செய்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |