ரூ.1,000 கோடி மதிப்பில் பசுமை ஹைட்ரஜன் ஆலை திறப்பு.., 2000 பேருக்கு கிடைக்கும் வேலைவாய்ப்பு
திருப்பதியில் 1000 கோடி ரூபாய் மதிப்பில் பசுமை ஹைட்ரஜன் ஆலை திறக்கப்பட்டுள்ளதால் 2000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.
பசுமை ஹைட்ரஜன் ஆலை
ஆந்திர மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு செயல்படுத்தி வருகிறார்.
அந்தவகையில் கடந்த 3-ம் திகதி அன்று திருப்பதியில் 1000 கோடி ரூபாய் மதிப்பில் பசுமை ஹைட்ரஜன் ஆலையை (green hydrogen plant) வீடியோ கான்ஃபிரன்சிங் முறை மூலம் திறந்து வைத்தார்.
ராக்மேன் இண்டஸ்ட்ரீஸில், ரூ.1,000 கோடி மதிப்பிலான ஹீரோ ஃபியூச்சர் எனர்ஜிஸின்(HFE) பசுமை ஹைட்ரஜன் ஆலையை தொடங்கியுள்ளது.
தொழில்துறை வெப்பமாக்கலுக்காக, HFE ஆலையானது குழாய் இயற்கை எரிவாயு (PNG) மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை (LPG) பசுமை ஹைட்ரஜனுடன் கலக்கிறது.
இது குறித்து சந்திரபாபு நாயுடு ட்விட்டர் பக்கத்தில், "HFE மற்றும் ராக்மேன் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவற்றால் தொடங்கப்பட்ட இந்த முன்னோடித் திட்டம், தொழில்துறை பயன்பாடுகளுக்காக பசுமை ஹைட்ரஜனை LPG/PNG உடன் கலக்கிறது. இது தொழில்துறை கார்பனை நீக்குவதில் குறிப்பிடத்தக்க திருப்புமுனையைக் குறிக்கிறது" என்று கூறியுள்ளார்.
300 kW PEM எலக்ட்ரோலைசர் பொருத்தப்பட்ட இந்த ஆலை, 1.1 MWp கூரை சூரிய மின் நிலையத்தால் இயக்கப்படுகிறது.
இது LPG-யில் 10 சதவீதம் வரை பசுமை ஹைட்ரஜனையும் PNG-யில் மூன்று சதவீதம் வரை கலக்க முடியும். இந்த ஆலையின் மூலம் 2,000 பேரை வேலைக்கு அமர்த்த முடியும்.
மேலும்,HFE ஆலையின் வருடாந்திர பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி 25 TPA ஐ 54 TPA ஆக விரிவுபடுத்த முடியும்.
சுற்றுச்சூழல் பாதிப்பைப் பொறுத்தவரை, 206 டன் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தைக் குறைத்து 195 டன் வரை ஆக்ஸிஜனை வளிமண்டலத்தில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முயற்சி இந்தியாவின் தூய்மையான எரிசக்தி மாற்றத்திற்கு ஒரு புதிய அளவுகோலை அமைக்கிறது. இந்த திட்டத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |