பிரித்தானியாவில் இம்மாத இறுதியில் நடைமுறைக்கு வரும் முக்கிய விதிமுறை!
பிரித்தானியாவில் இம்மாத இறுதியில் இருந்து பொது இடங்களுக்கு செல்ல தடுப்பூசி கடவுச்சீட்டு கட்டாயமாக்கப்படும் என பிரித்தானியாவின் தடுப்பூசி அமைச்சர் ஊறுதிப்படுத்தியுள்ளார்.
பிரித்தானியாவில், ஏற்கெனவே இரவு விடுதிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள நுழைவு தேவைகளை, இப்போது மற்ற வெகுஜன நிகழ்வுகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என நதிம் ஜஹாவி தெரிவித்துள்ளார்.
அதாவது Green Pass என்று அழைக்கப்படும் தடுப்பூசி போட்டதற்கான அரசாங்கத்தின் அதிகாரப்பூரவமான ஆதாரத்தை செப்டம்பர் இறுதிக்குள், கால்பந்து மைதானம் போன்ற மக்கள் அதிகம் கூடும் பெரிய இடங்களுக்கு கட்டாய நுழைவுத் தேவையாக மாற்றப்படுகிறது.
Credit: Alamy
இவ்வாறு செய்வதன்மூலம், குளிர்காலத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பதையும், நாட்டில் பொது முடக்கம் அமுல்படுத்துவதை தவிர்க்கலாம், மேலும் அனைத்து பொது இடங்களையும் அடிக்கடி மூடாமல், தொடர்ந்து திறந்து வைக்க இது உதவியாக இருக்கும் என ஜஹாவி கூறியுள்ளார்.
இந்த விதிமுறை, 16 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பெரியவர்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், "12 முதல் 15 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளுக்கு தடுப்பூசி வழங்குவது குறித்து, எந்த முடிவும் எடுக்கப்படவில்லை, இதற்கு பிறகு குழந்தைகளுக்கு தடுப்பூசியை பரிந்துரைக்கும் பட்சத்தில் நிச்சயமாக பெற்றோரிடம் சம்மதம் கேட்கப்படும் என்று ஜஹாவி உத்தரவாதம் அளித்தார்.