தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணப் பெண்! அம்பலமான மாப்பிள்ளையின் பித்தலாட்டம்
இந்தியாவில், மாப்பிள்ளை கருப்பு கண்ணாடி போட்ட படியே இருந்ததால், சந்தேகமடைந்த மணப் பெண் அவரை வாசிக்க சொன்ன போது, உண்மை தெரியவந்தது,
திருமணத்தை நிறுத்திய சம்பவம் நடந்துள்ளது. உத்திரப்பிரதேச மாநிலம் Auraiya-வில் வசிக்கும் Arjun Singh என்ற நபர் தன்னுடைய மகள் அர்ச்சனாவிற்கு, சிவம் என்ற நபருடம் திருமணம் நிச்சயம் செய்திருந்தார்.
அதன் படி கடந்த 20-ஆம் திகதி திருமண நாள் அன்று, மணமகள் மற்றும் மணமகன் இருவரும் ஊர்வலம் சென்று திரும்பிய பின்பு, பெண்ணின் குடும்பத்தினருக்கும், மாப்பிள்ளை மீது சந்தேகம் வந்துள்ளது.
ஏனெனில், அவர் கருப்பு கண்ணாடி அணிந்த படியே இருந்தார், அவர் அந்த கண்ணாடியை கழட்டவேயில்லை. இதனால் அவர் கண் குறைபாடு ஏதேனும் இருக்குமோ? அதன் காரணமாக அவர் கண்ணாடியை கழட்டவில்லையோ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதனால், அந்த சந்தேகத்தை தீர்க்க, மணப்பெண் வீட்டில் இருந்த செய்தித்தாளை, கண்ணாடி இல்லாமல் படிக்கும் படி கூறியுள்ளார். அப்போது அவர் வாசிக்க தவறியதால், மணப்பெண் மற்றும் குடும்பத்தினர் அதிச்சியடைந்தனர்.
உடனடியாக மணப்பெண் திருமணத்தை நிறுத்தினார். அதன் பின், மாப்பிள்ளை வீட்டார் தங்களிடம் உண்மையை கூறாமல் ஏமாற்றிவிட்டதாக கூறி, மணப் பெண் வீட்டார் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
அதில்,
கொடுக்கப்பட்ட வரதட்சணை அனைத்தையும் திருப்பித் தரும்படியும் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், சிவாமின் குடும்பத்தினர் தற்போது வரை அதை இன்னும் திருப்பித் தராத காரணத்தினால், அவருக்கு எதிராக எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.