கிழக்கில் படிப்படியாக சாயும் பூமி- என்னவாகும்? விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
உலக மக்கள் தங்களுக்கு தேவைக்கும் அதிகமான நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்ததன் விளைவாக, பூமி தனது அச்சிலிருந்து சாய்ந்திருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
பூமி சாய்ந்திருப்பதாக விஞ்ஞானிகள்
இது தொடர்பில் விஞ்ஞானிகள் முன்னெடுத்த ஆய்வில் பூமி தனது அச்சில் இருந்து கிழக்கில் கீழாக 80 செ.மீ. அளவுக்கு சாய்ந்திருப்பதாக கண்டறிந்துள்ளனர்.
கடந்த 1993 முதல் 2010 வரையான ஆண்டுகளில் மட்டும், நிலத்தடியிலிருந்து உலக மக்கள் தங்களது தேவைகளுக்காக 2,150 ஜிகா டன்கள் அளவுக்கு தண்ணீரை உறிஞ்சி எடுத்திருப்பதாகவும்,
Photos, CC BY-SA
இது கிட்டத்தட்ட 6 மி.மீற்றறுக்கும் அதிகமான கடல் மட்ட உயர்வுக்கு நிகர் என்றும் ஜியோபிசிகல் ரிசர்ச் லெட்டர்ஸ் என்ற இதழ் வெளியிட்டிருக்கும் ஆராய்ச்சிக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த 2016ல் புவியியல் ஆராய்ச்சியாளர்கள், நிலத்தடி நீர் மட்டத்தை அளவுக்கு அதிகமாக உறிஞ்சி எடுப்பது, பூமியின் சுழற்சியை பாதிக்கத் தொடங்கியிருப்பதாக எச்சரித்திருந்தனர்.
மோசமான பாதிப்புகள் ஏற்படலாம்
ஆனால், அது தொடர்பாக அப்போது விரிவான புள்ளிவிவரங்கள் வெளியாகியிருக்கவில்லை. இந்த நிலையில்தான், 1993 முதல் 2010ம் ஆண்டு வரையான காலகட்டத்தில் பூமியின் சுழற்சியில் 80 செ.மீ. அளவுக்கு கிழக்குப் பகுதியில் சாய்ந்து உள்ளதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
இந்த மாற்றத்தால், பூமியின் கால நிலையில் மிகப்பெரிய அல்லது மிக மோசமான பாதிப்புகள் ஏற்படலாம் என்றும் விஞ்ஞானிகள் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |