உயிருடன் தீயில் எரிந்து பலியான 18 நோயாளிகள்! கொரோனா மருத்துவமனையில் கோர விபத்து
இந்திய மாநிலம் குஜராத்தில் உள்ள கொரோனா மருத்துவமனையில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டதில் 18 நோயாளிகள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தில் பருச் நகரத்தில் உள்ள நலன்புரி மருத்துவமனையில் அதிகாலை 1 மணியளவில் கோவிட் -19 வார்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
அங்கு சுமார் 50 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உடனடியாக தீ விபத்து குறித்து தகவல் கொடுக்கப்பட்டு தீயணைப்புத் துறை சம்பவ இடத்திற்கு விரைந்தது.
நான்கு மாடி கட்டிடமான அந்த மருத்துவமனையிலிருந்து ஏராளமான நோயாளிகள் மீட்கபட்டனர். ஆனால், ஆரம்ப அறிக்கையின்படி, 12 நோயாளிகள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
நோயாளிகள் ஸ்ட்ரெச்சர்கள் மற்றும் படுக்கைகளில் உயிருடன் எரிந்து இறந்து கிடந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவிவருகின்றன. இந்த கோர இந்தியாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு மணி நேரத்திற்குள் தீ கட்டுப்படுத்தப்பட்டது மற்றும் சுமார் 50 நோயாளிகள் உள்ளூர் மக்கள் மற்றும் தீயணைப்பு வீரர்களால் மீட்கப்பட்டதாக தீயணைப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர்.
காலை 6.30 மணியளவில், இந்த கோர சம்பவத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 18-ஆக உயர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
COVID-19 வார்டில் இருந்த 12 நோயாளிகள் தீ மற்றும் அதனால் ஏற்பட்ட புகை காரணமாக இறந்தனர் என்று பருச் எஸ்.பி. ராஜேந்திரசிங் சூடாசாமா தெரிவித்தார்.
மீதமுள்ள 6 பேரும் கடுமையான தீக்காயங்களுடன் பிற மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்ட நிலையில் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
COVID-19 சிகிச்சைக்காக நியமிக்கப்பட்ட இந்த மருத்துவமனை குஜராத் தலைநகர் அகமதாபாத்திலிருந்து 190 கி.மீ தூரத்தில் உள்ள பருச்-ஜம்புசார் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது மற்றும் இது ஒரு அறக்கட்டளையால் நடத்தப்படுகிறது.
I m there at location they are hiding cause i had seen more than 30 by my eyes fully burnt pic.twitter.com/uarwWEzSdO
— Faisal M Shaikh (@shaikhfaisalm) April 30, 2021