500-க்கும் மேற்பட்ட வழக்குகள்.., வாடகை கட்டடத்தில் போலி நீதிமன்றத்தை நடத்தியவர் கைது

Gujarat
By Sathya Oct 24, 2024 05:55 AM GMT
Report

போலியான நீதிமன்றம் நடத்தி பொதுமக்களை ஏமாற்றி வந்த போலி நீதிபதி கைது செய்யப்பட்டுள்ளார்.

போலி நீதிமன்றம்

இந்திய மாநிலமான குஜராத், அகமதாபாத் நகரை சேர்ந்தவர் மோரிஸ் சாமுவேல் கிறிஸ்டியன் (37). இவர் அங்குள்ள காந்தி நகரில் வாடகை கட்டடத்தில் போலியான நீதிமன்றம் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.

இந்த நீதிமன்றத்தில் போலியாக எழுத்தர்கள், வழக்கறிஞர்களையும் நியமனம் செய்துள்ளார்.

இவருடைய போலி வழக்கறிஞர்கள், பல்வேறு நீதிமன்றங்களில் நிலங்கள் சார்ந்து தொடரப்பட்ட வழக்குகளின் மனுதாரர்களை அணுகியுள்ளனர். அப்போது அவர்களிடம், சிறப்பு தீர்ப்பாயத்தில் விரைந்து தீர்ப்பு வழங்கப்படும் என்று கூறியுள்ளனர்.

இதனை நம்பிய பொதுமக்கள் கிறிஸ்டியனின் போலி நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். அங்கு, காரசாரமான விவாதங்களும் நடைபெற்றுள்ளன.

பெரியார், அம்பேத்கருக்கு நடுவில் நிற்கும் விஜய்.., மாநாட்டின் புகைப்படம் வைரல்

பெரியார், அம்பேத்கருக்கு நடுவில் நிற்கும் விஜய்.., மாநாட்டின் புகைப்படம் வைரல்

பின்னர், தனக்கு சாதகமான தீர்ப்பை கிறிஸ்டியன் வழங்கி வந்துள்ளார். கடந்த 2019 -ம் ஆண்டு முதல் போலியான நீதிமன்றத்தை கிறிஸ்டியன் நடத்தி வந்துள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு பாபுஜி என்பவர் நில விவகாரம் தொடர்பாக கிறிஸ்டியனின் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இவர், ரூ.200 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை ஆக்கிரமித்து வைத்திருந்தார்.

அதாவது, 50 ஆண்டுகாலமாக அரசு நிலத்தில் குடியிருப்பதால் அந்த நிலத்தை தனது பெயருக்கு பத்திரப்பதிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த வழக்கை விசாரிப்பதற்காக பாபுஜியிடம் இருந்து பெரும் தொகையை கிறிஸ்டியன்பெற்றுள்ளார். இதில், அரசு மற்றும் மனுதாரர் தரப்பு வாதங்களுக்கு பிறகு குறிப்பிட்ட அரசு நிலம் பாபுஜிக்கு சொந்தமானது என்று தீர்ப்பு வழங்கியுள்ளார்.

500-க்கும் மேற்பட்ட வழக்குகள்.., வாடகை கட்டடத்தில் போலி நீதிமன்றத்தை நடத்தியவர் கைது | Gujarat Man Arrested For Running Fake Court

இதுதொடர்பான தீர்ப்பாணையை அகமதாபாத் ஆட்சியரிடம் பாபுஜி வழங்கி உள்ளார். ஆனால் ஆட்சியர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதையடுத்து அகமதாபாத் உரிமையியல் நீதிமன்றத்தில், கிறிஸ்டியனின் போலி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் நகலை இணைத்து பாபுஜி வழக்கு தொடர்ந்தார்.

அப்போது சந்தேகமடைந்த நீதிமன்ற பதிவாளர் பொலிஸில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் விசாரணையில் கிறிஸ்டியனின் போலி நீதிமன்றம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதையடுத்து, கிறிஸ்டியனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பாக பொலிஸார் கூறுகையில், "கடந்த 5 ஆண்டுகளாக பொலிஸில் சிக்காமல் போலி நீதிமன்றத்தை கிறிஸ்டியன் நடந்து வந்துள்ளார். வழக்கு விசாரணைக்காக பாபுஜியிடம் இருந்து ரூ.30 லட்சத்தை பெற்றிருக்கிறார்.

இவர், ஓராண்டில் சுமார் 500-க்கும் மேற்பட்ட வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கியுள்ளார். மேலும், பொதுமக்களிடம் இருந்து நிலங்களை ஏமாற்றி தனது பெயருக்கு மாற்றம் செய்துள்ளார்" என்றார்.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.     

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயம் தீர்த்தத் திருவிழா

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montmagny, France

08 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொழும்பு 13

04 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

03 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், கொட்டாஞ்சேனை

02 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கருகம்பனை, கொழும்பு

19 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bad Bergzabern, Germany

06 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Toronto, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Scarborough, Canada

04 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, நாவற்குழி, Markham, Canada

05 Sep, 2025
மரண அறிவித்தல்
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம்

08 Sep, 1995
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டைப்பிராய், கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada, Montreal, Canada

06 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

06 Sep, 2010
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Bad Vilbel, Germany, London, United Kingdom

02 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
32ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், சரசாலை

07 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

புதுமாத்தளன், இறம்பைக்குளம்

03 Sep, 2025
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, பிரித்தானியா, United Kingdom

05 Sep, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், London, United Kingdom, Markham, Canada

28 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், கைதடி கிழக்கு

03 Sep, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US