500-க்கும் மேற்பட்ட வழக்குகள்.., வாடகை கட்டடத்தில் போலி நீதிமன்றத்தை நடத்தியவர் கைது

Gujarat
By Sathya Oct 24, 2024 05:55 AM GMT
Report

போலியான நீதிமன்றம் நடத்தி பொதுமக்களை ஏமாற்றி வந்த போலி நீதிபதி கைது செய்யப்பட்டுள்ளார்.

போலி நீதிமன்றம்

இந்திய மாநிலமான குஜராத், அகமதாபாத் நகரை சேர்ந்தவர் மோரிஸ் சாமுவேல் கிறிஸ்டியன் (37). இவர் அங்குள்ள காந்தி நகரில் வாடகை கட்டடத்தில் போலியான நீதிமன்றம் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.

இந்த நீதிமன்றத்தில் போலியாக எழுத்தர்கள், வழக்கறிஞர்களையும் நியமனம் செய்துள்ளார்.

இவருடைய போலி வழக்கறிஞர்கள், பல்வேறு நீதிமன்றங்களில் நிலங்கள் சார்ந்து தொடரப்பட்ட வழக்குகளின் மனுதாரர்களை அணுகியுள்ளனர். அப்போது அவர்களிடம், சிறப்பு தீர்ப்பாயத்தில் விரைந்து தீர்ப்பு வழங்கப்படும் என்று கூறியுள்ளனர்.

இதனை நம்பிய பொதுமக்கள் கிறிஸ்டியனின் போலி நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். அங்கு, காரசாரமான விவாதங்களும் நடைபெற்றுள்ளன.

பெரியார், அம்பேத்கருக்கு நடுவில் நிற்கும் விஜய்.., மாநாட்டின் புகைப்படம் வைரல்

பெரியார், அம்பேத்கருக்கு நடுவில் நிற்கும் விஜய்.., மாநாட்டின் புகைப்படம் வைரல்

பின்னர், தனக்கு சாதகமான தீர்ப்பை கிறிஸ்டியன் வழங்கி வந்துள்ளார். கடந்த 2019 -ம் ஆண்டு முதல் போலியான நீதிமன்றத்தை கிறிஸ்டியன் நடத்தி வந்துள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு பாபுஜி என்பவர் நில விவகாரம் தொடர்பாக கிறிஸ்டியனின் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இவர், ரூ.200 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை ஆக்கிரமித்து வைத்திருந்தார்.

அதாவது, 50 ஆண்டுகாலமாக அரசு நிலத்தில் குடியிருப்பதால் அந்த நிலத்தை தனது பெயருக்கு பத்திரப்பதிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த வழக்கை விசாரிப்பதற்காக பாபுஜியிடம் இருந்து பெரும் தொகையை கிறிஸ்டியன்பெற்றுள்ளார். இதில், அரசு மற்றும் மனுதாரர் தரப்பு வாதங்களுக்கு பிறகு குறிப்பிட்ட அரசு நிலம் பாபுஜிக்கு சொந்தமானது என்று தீர்ப்பு வழங்கியுள்ளார்.

500-க்கும் மேற்பட்ட வழக்குகள்.., வாடகை கட்டடத்தில் போலி நீதிமன்றத்தை நடத்தியவர் கைது | Gujarat Man Arrested For Running Fake Court

இதுதொடர்பான தீர்ப்பாணையை அகமதாபாத் ஆட்சியரிடம் பாபுஜி வழங்கி உள்ளார். ஆனால் ஆட்சியர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதையடுத்து அகமதாபாத் உரிமையியல் நீதிமன்றத்தில், கிறிஸ்டியனின் போலி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் நகலை இணைத்து பாபுஜி வழக்கு தொடர்ந்தார்.

அப்போது சந்தேகமடைந்த நீதிமன்ற பதிவாளர் பொலிஸில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் விசாரணையில் கிறிஸ்டியனின் போலி நீதிமன்றம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதையடுத்து, கிறிஸ்டியனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பாக பொலிஸார் கூறுகையில், "கடந்த 5 ஆண்டுகளாக பொலிஸில் சிக்காமல் போலி நீதிமன்றத்தை கிறிஸ்டியன் நடந்து வந்துள்ளார். வழக்கு விசாரணைக்காக பாபுஜியிடம் இருந்து ரூ.30 லட்சத்தை பெற்றிருக்கிறார்.

இவர், ஓராண்டில் சுமார் 500-க்கும் மேற்பட்ட வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கியுள்ளார். மேலும், பொதுமக்களிடம் இருந்து நிலங்களை ஏமாற்றி தனது பெயருக்கு மாற்றம் செய்துள்ளார்" என்றார்.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.     
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, வள்ளிபுனம்

30 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

26 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, சிட்னி, Australia

28 Oct, 2015
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, வவுனிக்குளம், பருத்தித்துறை

26 Oct, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Edmonton, United Kingdom, England, United Kingdom

27 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US