கனடாவில் பெண் மீது துப்பாக்கிச்சூடு... குண்டு பாய்ந்து இந்தியர் பலி
கனடாவில், பெண்ணொருவரை சிலர் துப்பாக்கியால் சுட, இந்தியர் ஒருவர் குண்டு பாய்ந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் கவலையையும் உருவாக்கியுள்ளது.
பெண் மீது துப்பாக்கிச்சூடு
இந்தியாவின் பஞ்சாபைச் சேர்ந்த தேவிந்தர் சிங் (30), கனடாவின் சஸ்காட்செவன் மாகாணத்தில், டெக்சி சாரதியாக பணிபுரிந்துகொண்டே தன் மனைவி நடத்தும் சிற்றுண்டிச் சாலையில் அவருக்கு உதவியாக இருந்துவந்தார்.

தம்பதியருக்கு திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆகின்றன. அவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை 8.00 மணியளவில், பெண் பயணி ஒருவர் டெக்சி வேண்டும் என அழைக்க, அவரை ஏற்றிக்கொண்டு வருவதற்காக அவர் தங்கியிருந்த ஹொட்டலுக்குச் சென்றுள்ளார் சிங்.
அவர் அந்த ஹொட்டலில் தன் பயணிக்காக காத்திருக்கும்போது, ஹொட்டலுக்குள்ளிருந்து அந்த பெண் ஓடிவந்துள்ளார்.
அவர் காரில் ஏறுவதற்காக ஓடிவர, அவர் பின்னால் அவரை யாரோ துரத்திக்கொண்டுவந்துள்ளார்கள்.
அந்தப் பெண்ணை நோக்கி அவர்கள் துப்பாக்கியால் சுட, குண்டு சிங் மீது பாய்ந்துள்ளது.
தகவலறிந்து பொலிசார் அங்கு வரும்போது, சிங் ஏற்கனவே உயிரிழந்துவிட்டிருக்கிறார்.
சிங் மரணம் தொடர்பில், Kojac Adams (19)மற்றும் Garren Baptiste (19) ஆகிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
சிங் கொல்லப்பட்ட விடயம் குறித்து அவரது குடும்பத்தினருக்கு பொலிசார் தெரியப்படுத்த, அவர்கள் அதிர்ச்சியிலும் கவலையிலும் ஆழ்ந்துள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |