சிட்னியில் அதிர்ச்சி சம்பவம்! வீடுபுகுந்து நபர் சுட்டுக்கொலை..உயிர்தப்பிய நால்வர்
அவுஸ்திரேலியாவில் மர்ம நபர்கள் வீடுபுகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டார்.
திடீர் தாக்குதல்
தென்மேற்கு சிட்னியில் Canley Heights-யின் Arbutus தெருவில் உள்ள ஒரு வீட்டில், துப்பாக்கிகள் மற்றும் கத்திகளுடன் புகுந்த இருவர் அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
இந்த திடீர் தாக்குதலில் Ahio என்ற நபர் துப்பாக்கியால் சுடப்பட்டார். மேலும் நான்கு பேர் படுகாயமடைந்தனர். தாக்குதல் நடத்திய இருவரும் காரில் தப்பிச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து குண்டு காயங்களுடன் லிவர்பூல் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட Ahio, அங்கு சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார்.
32 வயது நபர் ஒருவரும், 23 மற்றும் 22 வயதுடைய இருவரும் Fairfield மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

காவல்துறை விசாரணை
பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர். மேலும், 19 வயதான இன்னொரு நபர் கையில் ஏற்பட்ட காயங்களுக்காக சிகிச்சை பெற்றார்.
காவல்துறையினர், Coconut Cartel என்ற கும்பலுடன் Ahio மீதான இந்தத் தகவலுக்கு தொடர்பு ஏதேனும் உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொல்லப்பட்ட Ahio, 2021ஆம் ஆண்டைச் சேர்ந்த நீதிமன்ற ஆவணங்களின்படி 'OneFour' என்ற குழுவுடன் தொடர்புடையவராக இருந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து காவல் கண்காணிப்பாளர் கிரேக் மிடில்டன் கூறுகையில், "இது மிகவும் துணிச்சலான, வன்முறையான தாக்குதல். இது சமூகத்திற்கும், நிச்சயமாக காவல்துறைக்கும் கவலையளிக்கிறது. எனவே, தென்மேற்குப் பகுதி முழுவதும் எங்களிடம் உள்ள வளங்களைக் கொண்டு எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறோம்" என்றார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |