பரபரப்பான லண்டன் சாலையில் நடந்த பயங்கரம்... உயிருக்கு பயந்து பதுங்கிய மக்கள்
லண்டனில் பட்டப்பகலில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு பொதுமக்களிடையே ஒருவர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
உயிருக்கு அஞ்சிய மக்கள்
பதறவைத்துள்ள இந்த சம்பவத்தை அடுத்து, உயிருக்கு அஞ்சிய மக்கள் வாகனங்களில் பதுங்கியுள்ளதும் Tottenham பகுதியில் கண்காணிப்பு கமெராவில் பதிவாகியுள்ளது.
தொடர்புடைய சம்பவமானது மே மாதம் 27ம் திகதி நடந்துள்ளதாக கூறப்படுகிறது. 21 வயதான ரிக்கார்டோ ஆண்டர்சன் தமது எதிர்தரப்பு நபரை எதிர்கொண்டதும் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
எதிர்பாராத இந்த சம்பவத்தால், சிறார்கள் உட்பட பொதுமக்கள் பலர் அருகாமையில் உள்ள கடைகளுக்கும் வாகனங்களின் பின்னாலும் பதுங்கியுள்ளனர். இதனிடையே, ஆண்டர்சனின் எதிராளியும் துப்பாக்கியால் சுட முயன்று, அந்த துப்பாக்கி செயல்படாமல் போக, அந்த நபர் தமது வாகனத்தை ஆண்டர்சன் மீது மோத வேகமெடுத்துள்ளார்.
ஆனால் ஆண்டர்சன் சம்பவயிடத்தில் இருந்து தப்பியதாக கூறப்படுகிறது. இதனிடையே, ஸ்கொட்லாந்துயார்டு அந்த வாகனத்தை பறிமுதல் செய்துள்ளதுடன், அந்த வாகனம் திருடப்பட்டது என்பதையும் கண்டறிந்தனர்.
அடையாளம் காண முடியவில்லை
இருப்பினும், பறிமுதல் செய்யப்பட்ட அந்த வாகனத்தின் சாரதி யார் என்பது தொடர்பில் இதுவரை பொலிசாரால் அடையாளம் காண முடியவில்லை என்றே கூறப்படுகிறது. வடக்கு லண்டனில் பரபரப்பான சாலையில் பட்டப்பகலில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது என்றே பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
கடைகள் திறந்திருக்க, சாலையில் மக்கள் நடமாட்டம் இருந்தது என்றும் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் ஆண்டர்சன் மக்கள் கூட்டம் தொடர்பில் கவலை ஏதுமின்றி, துப்பாக்கியால் சுட்டுள்ளார் என்றே பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கண்கானிப்பு கமெராவில் பதிவாகியிருந்த காட்சிகளின் அடிப்படையிலேயே ஆண்டர்சன் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது சிறை தண்டனையை எதிர்பார்த்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |