ஜேர்மன் மாகாணமொன்றில் ஆலங்கட்டி மழை: ஐந்தில் நான்கு கட்டிடங்கள் சேதம்
தெற்கு ஜேர்மனியின் பவேரியா மாகாணத்தில் உள்ள ஒரு சிறிய நகரத்தில் பெரிய ஆலங்கட்டி மழையுடன் வீசிய புயலில் ஐந்தில் நான்கு கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கட்டிடங்கள் பலத்த சேதம்
சனிக்கிழமையன்று பவேரியாவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கிஸ்ஸிங் என்னும் நகரில், கூடாரம் ஒன்றைப் போட முயன்றவர்கள் புயலில் சிக்கியதில் 12 பேர் காயமடைந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், அதே பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லம் ஒன்று உட்பட பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.
ஞாயிற்றுக்கிழமை 8 சென்றிமீற்றர் அளவுள்ள ஆலங்கட்டிகள் விழுந்ததால், கார்கள், வீட்டுக் கூரைகள், மின் விளக்குகள் சேதமடைந்துள்ளன. 80 சதவிகித கட்டிடங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும், ஆனால், யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |