நிரந்தரமாக முடி உதிர்வை நிறுத்தி நீளமாக வளர்க்க உதவும் ஒரு புதிய தீர்வு
பொதுவான அனைவருக்கும் முடி உதிர்வு, நரைமுடி, வறண்ட முடி, பொடுகு போன்ற பிரச்சனைகள் இருக்கும்.
மன அழுத்தம், தவறான உணவுப் பழக்கம் மற்றும் மருந்துகள் போன்றவையும் முடி உதிர்வுக்கான முக்கிய காரணங்களாக உள்ளன.
பலரும் தலைமுடியை அழகாக வைத்திருப்பதற்கு பல வகையான எண்ணெய்களையும் ஆயுர்வேத பொருட்களையும் பயன்படுத்துவார்கள்.
இன்னும் சிலர் மருத்துவர்களின் ஆலோசனைக்கேற்ப சில பொருட்களை வாங்கி பயன்படுத்துவார்கள்.
அந்தவகையில், முடி உதிர்வு பிரச்சினையை நிறுத்துவதற்கு கொழும்பு பல்கலைக்கழகத்தால் "SATINY" எனும் தயாரிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
SATINY எவ்வாறு உதவுகிறது?
கொழும்பு பல்கலைக்கழகத்தின் விரிவான ஆராய்ச்சியின் ஆதரவுடன் தயாரித்த இந்த கலவை, இயற்கையாகவே ஆரோக்கியமான, பளபளப்பான முடியை வழங்கும்.
Alternanthera sessilis, Eclipta prostrata, Indigofera tincloris, Cocos nucifera ஆகியவை SATINY தயாரிப்பின் மூலப்பொருட்கள் ஆகும்.
இதை பயன்படுத்துவதால் உயிரியல் செயற்பாடுகள், உச்சந்தலை எரிச்சல், பொடுகு மற்றும் முடியை பாதிக்கும் பிற சேதங்களைத் தடுக்கின்றன.
மேலும், SATINY பயன்படுத்துவதால் வயதாகும் செயல்முறையை தாமதப்படுத்துகின்றன.
எப்படி பயன்படுத்துவது?
முதலில் SATINYஐ இரவு நேரங்களில் தூங்குவதற்கு முன் பயன்படுத்துவது சிறந்தது.
இதனை உங்கள் உச்சந்தலையில் 2 முதல் 3 சொட்டுகள் விட்டு தடவி மெதுவாக மசாஜ் செய்யவும்.
இரண்டு வாரங்கள் இதனை தொடர்ந்து பயன்படுத்தி வந்தாலே முடி உதிர்வு குறைவதை காணலாம்.
SATINY பயன்படுத்துவதால் முடி வளர்ச்சியை அதிகரிக்க, முடியின் பிரகாசத்தை அதிகரிக்க மற்றும் மென்மைகூந்தலை பெற, முடி உதிர்தலைத் தடுக்க, பொடுகுப் பிரச்சினைகளை சரிசெய்ய மற்றும் இள நரையை தடுக்க பெரிதளவில் உதவுகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |