கொத்தாக 7 பேர்களை சுட்டுக்கொன்ற பண்ணைத் தொழிலாளி: அம்பலமான உண்மை பின்னணி
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சீன பண்ணைத் தொழிலாளி ஒருவர் சக ஊழியர்கள் 7 பேர்களை சுட்டுக்கொன்றதன் உண்மை பின்னணி வெளியாகியுள்ளது.
100 டொலர் தொகைக்காகவே
குறித்த தொழிலாளி சேதப்படுத்திய பொருளுக்காக செலுத்த வேண்டிய 100 டொலர் தொகைக்காகவே, இந்த படுகொலை சம்பவம் நடத்தப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மை சட்டத்தரணி வெளிப்படுத்தியுள்ளார்.
@getty
ஃபோர்க்லிஃப்ட் ஆபரேட்டராக பணியாற்றி வந்த அந்த 66 வயது Chunli Zhao என்பவர் இரண்டு பண்ணைகளில் தாக்குதலை முன்னெடுத்திருந்தார். தாம் பணியாற்றி வந்த California Terra Garden பண்ணை மற்றும் அருகாமையில் அமைந்துள்ள Concord பண்ணையிலும் தாக்குதல் நடத்தியிருந்தார்.
சக ஊழியர் இயக்கி வந்த புல்டோசர் மீது தமது ஃபோர்க்லிஃப்ட்டை மோதிய விவகாரத்தில், ஏற்படுத்திய சேதங்களுக்காக 100 டொலர் செலுத்த வேண்டும் என பண்ணை உரிமையாளர் கூறியுள்ளார்.
@reuters
படுகொலைக்கு தூண்டியது
இது அவருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியதுடன், படுகொலைக்கும் தூண்டியுள்ளது. தம்மீது எந்த தவறும் இல்லை என வாதிட்ட Chunli Zhao, அதை ஏற்க மறுத்த இருவரை முதலில் சுட்டுக்கொன்றுள்ளார்.
பின்னர் மேலும் இருவரை சுட்டுக்கொன்ற பின்னர், அருகாமையில் உள்ள Concord பண்ணைக்கு விரைந்துள்ளார். தொடர்புடைய பண்ணையில் மூவரை சுட்டுக்கொன்றுள்ளார்.
@AP
மேலும், அதிகாரிகள் முன்னெடுத்த விசாரணையிலும் Chunli Zhao நடந்தவற்றை ஒளிவுமறைவின்றி தெரிவித்துள்ளார்.
கொல்லப்பட்ட அனைவரும் Chunli Zhao உடன் ஏற்கனவே கருத்துவேறுபாடு கொண்டவர்கள் என்பதும், வாய்ப்பு அமைந்த போது அனைவரையும் Chunli Zhao கொன்றுள்ளதாகவும் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.