பிரித்தானியா சுகாதார செயலரால்... அமைச்சரவையில் பாதி பேருக்கு ஏற்பட்ட சிக்கல்
பிரித்தானியாவின் சுகாதார செயலாளர் சஜித் ஜாவித், தமக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள நிலையில், அமைச்சரவையில் பாதிக்கும் அதிகமானோர் தனிமைப்படுத்தலுக்கு செல்ல உள்ளனர்.
பிரித்தானியாவின் புதிய சுகாதார செயலாளரான 51 வயது சஜித் ஜாவித் தமக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாக அறிவித்துள்ளார்.
முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டதால் தமக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே காணப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், சமீபத்தில் அவருடன் தொடர்பு கொண்டவர்கள் குறித்து தகவல் திரட்டப்படுகிறது. மேலும், சமீபத்தில் அவரை நேரில் சந்தித்தவர்கள் அனைவரும் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஜூலை 19 முதல் தளர்வுகள் அமுலுக்கு கொண்டுவரப்படும் நிலையில், அமைச்சரவையில் பாதிக்கும் அதிகமானோர் தனிமைப்படுத்தலுக்கு செல்ல உள்ளனர்.
தற்போதைய சூழலில், வெள்ளிக்கிழமை சஜித் ஜாவித் மற்றும் பிரதமர் போரிஸ் ஜோன்சன் சந்திப்பு தொடர்பில் பிரதமர் அலுவலகத்தில் இருந்து இதுவரை எந்த கருத்தும் வெளியிடப்படவில்லை.
பிரித்தானிய மக்களுக்கு தளர்வுகளை அறிவிக்கவிருக்கும் பிரதமர், அதே நாளில் இருந்து சுய தனிமைப்படுத்தலுக்கு செல்வார் என்றே கூறப்படுகிறது.