பிரித்தானியாவில் இதுவரை எத்தனை பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர் தெரியுமா? ஆச்சரிய தகவல்
பிரித்தானியாவில், இருக்கும் மக்களில் பாதிக்கு பாதி பேர் கொரோனாவிற்கான முதல் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, அவசர கால நடவடிக்கையாக பிரித்தானியா தான் தடுப்பூசிக்கு முதல் நாடாக அனுமதி கொடுத்தது. இதையடுத்து நாட்டில் கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்படக் கூடியவர்கள், மருத்துவ ஊழியர்கள் போன்றோர்க்கு முதற்கட்டமாக போடப்பட்டு, அடுத்தடுத்த கட்டமாக போடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தற்போது வெளியான தகவலின் படி, பிரித்தானியாவின் மக்கள் தொகையில், பாதிக்கு பாதி மேலானவர்கள் கொரோனாவிற்கான முதல் தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளனர்.
66,650,000 மக்களில், 33,388,637 பேர் இந்த முதல் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர், இன்று வெளியிடப்பட்ட சுகாதாரத் துறை புள்ளிவிவரங்களின்படி, மொத்தம் 11,623,671 பேர் தங்கள் இரண்டாவது தடுப்பூசியை பெற்றுள்ளனர்.
இது மொத்த மக்கள் தொகையில் 17.4 சதவீதம் ஆகும். இங்கிலாந்தில் கொடுக்கப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை இப்போது 45,012,308-ஆக உள்ளது.
16 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே தற்போது கொரோனா தடுப்பூசியை பெற முடிகிறது, அதாவது நோய்த்தடுப்புக்கு தகுதியான மக்களின் விகிதம் இன்னும் அதிகமாக உள்ளது என்பதால், அதன் அடிப்படையில் போடப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி நடைமுறைக்கு வந்த பின், பிரித்தானியாவில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி கடந்த திங்கட் கிழமை முதல் பப்கள் மற்றும் உணவகங்கள் போன்றவை இங்கிலாந்தில் திறக்கப்பட்ட போதிலு, கொரோனா பாதிப்பு அந்தளவிற்கு இல்லை என தேசிய புள்ளி விவரங்களுக்கான அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், பிரித்தானியாவில் அடுத்த கட்ட ஊரடங்கு தளர்வு வரும் 17-ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது. இதில் கட்டுப்பாடுகள் பெருமளவு குறைக்கப்படலாம் என்று நம்பப்படுகிறது.