இதை மட்டும் ஜேர்மனி பொறுத்துக் கொள்ளாது! இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல் தொடர்பில் ஜேர்மனி பரபரப்பு கருத்து
யூத எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை ஜேர்மனி பொறுத்துக் கொள்ளாது என்று அந்நாட்டு அதிபர் ஏஞ்சலா மெர்க்கலின் செய்தித்தொடர்பாளர் Steffen Seibert தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே பயங்கர மோதல் இடம்பெற்று வருகிறது.
கிழக்கு ஜெருசலேமில் உள்ள Sheikh Jarrah பகுதியிலிருந்து அரபு குடும்பங்களை வெளியேற்றுவது தொடர்பாக பாலஸ்தீனியர்களுக்கும் இஸ்ரேலிய பொலிசாருக்கும் இடையிலான மோதல்களின் விளைவாக இந்த மோதல் ஏற்பட்டது.
இந்நிலையில், இஸ்ரேலை மீது ஹமாஸ் (பாலஸ்தீன sunni இஸ்லாமிய போராளிகள் இயக்கம்) ராக்கெட்டுகளை ஏவுவது ‘தீவிரவாத தாக்குதல்கள்’ என ஜேர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கலின் செய்தித்தொடர்பாளர் Steffen Seibert தெரிவித்துள்ளார்.
யூத எதிர்ப்பு கோஷங்களை எழுப்பி இஸ்ரேலிய கொடிகளை எரிப்பது போன்ற யூத எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை ஜேர்மனி பொறுத்துக் கொள்ளாது என்று அவர் கூறினார்.