உள்ளாட்சித் தேர்தல் தோல்விக்கு ஹமாஸ்தான் காரணம்: சர்ச்சையை உருவாக்கியுள்ள கருத்து
பிரித்தானியாவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களின் முடிவுகள், எதிர்வரும் பொதுத்தேர்தலையும், அதன் முடிவுகளையும் தீர்மானிக்கக்கூடியதாக அமையலாம் என அரசியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
உள்ளாட்சித் தேர்தல்களில், லேபர் கட்சி பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. வேறு வகையில் கூறினால், ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி, பெரும் தோல்வியை சந்தித்துள்ளது.
இஸ்லாமிய வாக்காளர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்திய விடயம்
இப்படிப்பட்ட ஒரு சூழலில், சில குறிப்பிட்ட இடங்களின் தேர்தல் முடிவுகள் பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றன. அவற்றில், லண்டனும் West Midlandsம் அடங்கும்.
இந்நிலையில், West Midlandsஇல் லேபர் கட்சிக்கு தோல்வியே கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குக் காரணம், அங்கு அதிகம் வசிப்பவர்கள் இஸ்லாமியர்கள். இஸ்ரேல் ஹமாஸ் மோதல்களைத் தொடர்ந்து, காசாவில் போர் நிறுத்தம் கோரி வாக்கெடுப்புகள் நடந்தபோது, லேபர் கட்சியினர் அதை தவிர்த்தார்கள். அதாவது, போர் நிறுத்தத்துக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கவில்லை.
ஆகவே, லேபர் கட்சியின் இந்த நிலைப்பாடு இஸ்லாமிய வாக்காளர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியதாக கருதப்படுகிறது. ஆகவே, அவர்கள் காசாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த Akhmed Yakoob என்னும் சுயேட்சை வாக்காளருக்கே வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹமாஸ்தான் காரணம்
இந்நிலையில், அதாவது, West Midlandsஇல் லேபர் கட்சிக்கு தோல்வியே கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த ஒருவர், மேயர் தேர்தலில் வெல்லப்போவது West Midlands அல்ல அது, Middle East, மீண்டும் ஹமாஸ் உண்மையான வில்லனாகிவிட்டது என்று கூறியுள்ளார்.
அதாவது, West Midlandsஇல் லேபர் கட்சிக்கு தோல்வி ஏற்படுமானால், அதற்குக் காரணம், இஸ்லாமியர்கள் என மறைமுகமாக தாக்கியுள்ளார்.
அவரது கருத்து பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. மூத்த லேபர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் கருத்தை கடுமையாக விமர்சித்துள்ளதுடன், அக்கருத்தைத் தெரிவித்தவரை கட்சியிலிருந்து உடனடியாக நீக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்கள்.
லேபர் கட்சியின் செய்தித்தொடர்பாளர் கூறும்போது, இந்த இனவெறுப்புக் கருத்துக்கு லேபர் கட்சி கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறது. அக்கருத்தைத் தெரிவித்தவர்கள் கட்சி சார்பில் பேசவில்லை, அவர்களுடைய கருத்தை கட்சி வரவேற்கவும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |