தேர்தலில் லேபர் கட்சி வெற்றி பெற்றால் மகிழ்ச்சி: பிரித்தானியாவிலிருக்கும் இந்தியர் கூறும் விடயம்
பிரித்தானியாவில் பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள விடயம், ஒரு தரப்பினருக்கு பெரும் மகிழ்ச்சியை உருவாக்கியுள்ளது. அவர்கள், எப்போது ருவாண்டாவுக்கு நாடுகடத்தப்படுவோமோ என்னும் அச்சத்தில் வாழும் புகலிடக்கோரிக்கையாளர்கள்!
தேர்தலில் லேபர் கட்சி வெற்றி பெற்றால் மகிழ்ச்சி
தேர்தலில் லேபர் கட்சி வெற்றி பெற்றால் மகிழ்ச்சி தங்களுக்கு மகிழ்ச்சி என்கிறார் பிரித்தானியாவிலிருக்கும் இந்தியரான Damil. புகலிடக்கோரிக்கையாளரான Damil, அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பது தெரியவில்லை, தேர்தலில் தேர்தலில் லேபர் கட்சி வெற்றி பெற்றால் என் போன்றவர்களுக்கு மகிழ்ச்சி. ஆகவே, ருவாண்டா குறித்து மட்டுமல்ல, தேர்தல் முடிவுகள் குறித்தும் அச்சத்திலிருக்கிறோம் என்கிறார்.
விடயம் என்னவென்றால், தேர்தலில் ரிஷி பிரதமர் பதவியை இழப்பாரானால், ருவாண்டா திட்டம் செயல்படாமலே போக வாய்ப்புள்ளது. காரணம், லேபர் கட்சி தேர்தலில் வெற்றி பெறுமானால், ருவாண்டா திட்டம் ரத்து செய்யப்படும் என லேபர் கட்சித் தலைவரான Keir Starmer தெரிவித்துள்ளார். ஆகவேதான், லேபர் கட்சி தேர்தலில் வெற்றிபெறவேண்டும் என புகலிடக்கோரிக்கையாளர்கள் விரும்புகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |