தீவிரவாதியை ‘தியாகி’ என அழைத்து அஞ்சலி செலுத்திய பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்! வச்சி செய்யும் நெட்டிசன்கள்
பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், காலிஸ்தானி தீவிரவாதி Bhindranwale-வை தியாகி என்று அழைத்தது அஞ்சலி செலுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆபரேஷன் ப்ளூ ஸ்டாரின் போது பொற்கோயிலுக்குள் கொல்லப்பட்ட காலிஸ்தானிய தீவிரவாதி Jarnail Singh Bhindranwale மற்றும் பிறருக்கு கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் அஞ்சலி செலுத்தினார்.
ஆபரேஷன் ப்ளூஸ்டாரின் 37வது ஆண்டு நினைவு தினத்தன்று, ஹர்பஜன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தியாகிகளுக்கு வீரவணக்கம் என்ற தலைப்பில் பொற்கோயிலுக்குள் கொல்லப்பட்ட காலிஸ்தானிய தீவிரவாதி Jarnail Singh Bhindranwale மற்றும் பிறர் புகைப்படங்களை பதிவிட்டார்.
Then Harbhajan Singh wanted donation for the foundation of Shahid Afridi who abused PM Modi & our Army and now he glorified Khalistani Terrorist Jarnial Singh Bhindranwale the killer of Thousands as a "Martyr."
— Suraj Kaul (@surajkaul4) June 7, 2021
Shameful #HarbhajanSingh@Sanjay_Dixit @ShefVaidya @AsYouNotWish pic.twitter.com/kl4NFtgqXa
மேலும், 1984 ஜூன் 1 முதல் ஜூன் 6ம் திகதி வரை பெற்கோயிலுக்குள் நடந்த ஆபரேஷனில் உயிர் தியாகம் செய்த தியாகிகளுக்கு மனமார்ந் அஞ்சலி என பதிவிட்டார்.
இது கடும் சர்ச்சையை கிளப்பியதை அடுத்து, தீவிரவாதிக்கு அஞ்சலி செலுத்திய இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜனை நெட்டிசன்கள் சரமாரியாக கிண்டலடித்தும் விமர்சித்தும் வருகின்றனர்.