உயிருக்குப் போராடும் குழந்தைக்கு உதவி கேட்டு ஹர்பஜன் சிங் முறையீடு
சமீபத்தில் ஹர்பஜன் சிங் முதுகெலும்பு தசைநார் சிதைவு நோயுடன் போராடிக் கொண்டிருக்கும் யுவான் என்ற ஒன்றரை குழந்தையின் மருத்துவச் செலவுக்காக நன்கொடை கோரி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில் அந்த குழந்தைகயின் மருத்து சிகிச்சைக்கு உதவும் மருந்தின் விலை (Zolgensma) 2.1 மில்லியன் டாலர்கள் அதாவது சுமார் ரூ.16 கோடியாகும். ஆகவே ரூ.50, 100, 10 ரூபாய் உதவி கூட கைகொடுக்கும் என்று ஹர்பஜன் பதிவிட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி இவர் வியாழனன்று மேற்கொண்ட ட்விட்டர் பதிவில் தன் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் விதமாக “ பிறருக்கு உதவுங்கள், எப்போது உதவி தேவைப்படுகிறதோ அப்போது பிறருக்கு உதவுங்கள்” என்று முறையிட்டுள்ள பதிவு ரசிகர்களின் பாராட்டுகளை குவித்துள்ளது.
Please help yuvaan 🙏🙏 https://t.co/uS5mmhMxuL
— Harbhajan Turbanator (@harbhajan_singh) June 4, 2021
இதனையடுத்து பார்த்த நெட்டிசன்கள், சிலர்‘உதவி செய்வதை மக்கள் மறந்து விட்டனர்’என்று வருத்தம் தெரிவித்தும் , “ நல்ல வாழ்க்கைக்கு உங்களின் இந்த அறிவுரை அவசியமானது. ஆனால் வெட்கம் கெட்டுப்போய் பணத்தின் பின்னால் மனிதர்கள் ஓடிக்கொண்டிருக்கின்றனர்” என்று இன்னொரு நெட்டிசன் பதிவிட்டுள்ளது நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோவுடன் கிரவுட் ஃபண்டிங் மூலம் திரட்டப்படும் நன்கொடைக்கான இணைப்பைப் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.