என்ன விட்டுருங்க! தேர்வாளர்களுக்கு தகவல் அனுப்பிய ஹர்திக் பாண்டியா
இந்திய ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, இந்திய அணி தேர்வாளர்களுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
சமீபத்தில் நடந்த முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் எதிர்பார்த்த அளவிற்கு ஹர்திக் பாண்டியா விளையாடவில்லை.
டி20 உலகக் கோப்யைில் 4 ஓவர்களை வீசிய பாண்டியா ஒரு விக்கெட்டை கூட கைப்பற்றவில்லை.
இதனையடுத்து, நியூசிலாந்திற்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 போட்டிக்கான இந்திய அணியில் பாண்டியாவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இந்நிலையில், பாண்டியா அவரது உடற்தகுதியை மேம்படுத்தி வருவதாகவும், சிறது காலம் இந்திய அணி தேர்வுக்கு தன்னை கருத்தில் கொள்ள வேண்டாம் என தேர்வாளர்களிடம் அவர் கேட்டுக்கொண்டதாக ESPNcricinfo தெரிவித்துள்ளது.
அதேசமயம், பாண்டியா முழு நேர பந்து வீச்சாளராக அணிக்கு திரும்ப திட்டமிட்டுள்ளதாக ESPNcricinfo குறிப்பிட்டுள்ளது.