ஹார்திக் பாண்ட்யாவை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டார கோஹ்லி? டெஸ்ட் போட்டி புறக்கணிப்பு குறித்து எழுந்த சர்ச்சை
இந்திய அணியின் சிறந்த ஆல் ரவுண்டரான ஹார்திக் பாண்ட்யாவை, கேப்டன் கோஹ்லி ஏமாற்றிவிட்டார் என்று ரசிகர்கள் இணையத்தில் புலம்பி வருகின்றனர்.
இங்கிலாந்தில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான இறுதிப் போட்டி, வரும் ஜுன் மாதம் 18-ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த இறுதிப் போட்டியில் நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகள் மோதுகின்றன.
இதற்கான இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. அதில் இந்திய அணியின் சிறந்த ஆல் ரவுண்டரும், அதிரடி ஆட்டக்காரருமான ஹார்திக் பாண்ட்யாவின் பெயர் இல்லை.
இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து பிசிசிஐ தரப்பு கூறுகையில், டெஸ்ட் போட்டியில் பாண்டியா விளையாட வேண்டும் என்றால் நிச்சயம் அவர் பந்து வீச தகுதியானவராக இருக்க வேண்டும்.
தற்போது அறுவை சிகிச்சைக்குப் பின்பு பந்து வீசவில்லை என்பதனால் அவரை தெரிவு செய்ய முடியாது அவர் மீண்டும் பந்துவீச அளவிற்கு உடல் தகுதி வந்தால் மட்டுமே அவரை டெஸ்ட் அணியில் நாங்கள் தெரிவு செய்ய முடியும் என்று கூறியிருந்தது.
இந்நிலையில் தற்போது பாண்ட்யா நீக்கப்பட்டதன் பின்னணியில் பின்னால் கோஹ்லி இருக்கிறார் என்றும், அவர் ஏமாற்றிவிட்டார் எனவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
ஏனெனில், நடைபெற்று முடிந்த அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து தொடரின்போது ஒரு சில ஓவர்கள் மட்டுமே பாண்ட்யா பந்துவீசினார். இது குறித்து கோஹ்லியிடம் கேட்கப்பதற்கு, நிச்சயம் ஹர்டிக் பண்ட்யா வருங்காலத்தில் பந்து வீசுவார் என்றும் அவருடைய பணிச்சுமையை குறைப்பதற்காகவே நாங்கள் அவரை தற்போது பந்துவீச அழைப்பதில்லை என்றும் கூறினார்.
மேலும் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா போன்ற ஆடுகளங்களில் ஹர்டிக் பாண்ட்யாவின் வேகப்பந்து வீச்சு டெஸ்ட் போட்டிகளுக்கு உதவும் என்பதால் அதற்காகவே தற்போது அவரை பந்துவீச வைக்காமல் ஓய்வு கொடுத்து வருகிறோம் என்பது போலவும் கோஹ்லி கூறியிருந்தார்.
இப்படி டெஸ்ட் போட்டிக்காக அவருக்கு அதிக ஓவர்கள் கொடுக்காமல் வைத்திருந்த கோஹ்லி, இப்போது திடீரென்று அவரை டெஸ்ட் அணியில் இருந்து எடுக்காமல் விட்டது ஏன்? இது சரியாக தெரியவில்லை என்ற சர்ச்சை எழுந்துள்ளது.