ஐபிஎல் 2022ல் செம டுவிஸ்ட்! புதிய கேப்டன் ஆகிறார் இந்திய அணியின் நட்சத்திர வீரர்
2022 ஐபிஎல் தொடரில் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா அகமதாபாத் அணியின் கேப்டனாக நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் தொடருக்குள் புதிதாக வந்துள்ள லக்னோ, அகமதாபாத் அணிகள் 2 உள்நாட்டு வீரர்கள் மற்றும் ஒரு அயல்நாட்டு வீரரை மெகா ஏலத்திற்கு முன்பாகவே ஒப்பந்தம் செய்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
அதன்படி லக்னோ அணி கே.எல்.ராகுலை கேப்டனாகவும், ரஷிக் கான் ஆகியோரையும் தேர்ந்தெடுத்திருப்பதாக கூறப்பட்டது. இதே போல அகமதாபாத் அணி ஸ்ரேயாஸ் ஐயரை கேப்டனாக நியமித்து ஒப்பந்தம் செய்தது.
இந்நிலையில் பெரும் திருப்புமுணையை அகமதாபாத் அணியின் நிர்வாகம் கொடுத்துள்ளது. அதாவது ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக ஹர்திக் பாண்ட்யாவை கேப்டனாக நியமித்து முடிவெடுத்துள்ளது.
இதே போல ரஷித் கானையும் அகமதாபாத் அணி ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிகிறது. ரஷித் கான் முதலில் லக்னோ அணிக்கு செல்லவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் இதிலும் ட்விஸ்ட் ஏற்பட்டுள்ளது.
அதே நேரம் தொடர்ந்து பந்துவீசாமல் இருக்கும் ஹர்திக் பாண்டியா மீண்டும் பார்முக்கு திரும்பி தன்னை முழுவதுமாக நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திலும் உள்ளார்.