நடிகை விஜயலட்சுமி விவகாரம்! ஹரி நாடாரை கைது செய்ய போலீசார் தீவிரம்
பிரபல நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில், பெங்களூரு சிறையில் உள்ள ஹரி நாடாரை கைது செய்ய அனுமதிக்க வேண்டும் என்று சென்னை போலீஸார், பெங்களூரு போலீஸாருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
நடிகர் விஜய்- சூர்யா நடிப்பில் வெளியான ப்ரண்ட்ஸ் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை விஜயலட்சுமி.
தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வந்தார், சின்னத்திரை சீரியல்களிலும் களமிறங்கிய அசத்திய விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
மேலும் கடந்த 2020ம் ஆண்டு தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற விஜயலட்சுமி காப்பாற்றப்பட்டார்.
தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து வெளியேறிய விஜயலட்சுமி தர்ணா போராட்டம் நடத்தியதுடன், தன்னை ஹரிநாடார் மிரட்டுவதாக குற்றம்சாட்டினார்.
இதுதொடர்பாக மீண்டும் விசாரணையில் இறங்கியுள்ள திருவான்மியூர் போலீஸார் பெங்களூரு சிறையில் உள்ள ஹரி நாடாரை, விஜயலட்சுமி வழக்கில் கைது செய்ய அனுமதிக்கக் கோரி, பெங்களூரு போலீஸாருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.