ஹரியை மீண்டும் ராஜ குடும்பத்துக்குள் அனுமதிக்கமாட்டேன்: அடம்பிடிக்கும் இளவரசர் வில்லியம்
தன் தம்பியாகிய இளவரசர் ஹரியை மீண்டும் ராஜ குடும்பத்துக்குள் அனுமதிப்பதில்லை என்பதில் இளவரசர் வில்லியம் உறுதியாக இருப்பதாக ராஜ குடும்ப நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தவறிய வாய்ப்பு
யாரும் எதிர்பாராத வகையில், இளவரசி டயானாவின் சகோதரியின் கணவருடைய இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக பிரித்தானியா வந்திருந்தார் இளவரசர் ஹரி.
அந்த நிகழ்ச்சியில் இளவரசர் வில்லியமும் கலந்துகொண்டதால், அண்ணனும் தம்பியும் மீண்டும் இணையக்கூடும் என பலரும் எதிர்பார்த்தார்கள்.
ஆனால், ஹரியும் வில்லியமும் ஒரு வார்த்தை கூட பேசிக்கொள்ளவில்லை என அந்த நிகழ்ச்சியில் பங்குகொண்டவர்கள் தெரிவிக்கிறார்கள்.
சகோதரர்கள் இருவரும் தங்கள் தாய் மீது அதீத பாசம் கொண்டவர்கள் என்பதால், அவர் தொடர்பிலான ஒரு நிகழ்ச்சி இருவரையும் இணைக்கக்கூடும் என நினைத்தால், அந்த நிகழ்ச்சியில் கூட ஹரியும் வில்லியமும் பேசிக்கொள்ளவில்லை என்பதால் ராஜ குடும்ப நலம் விரும்பிகள் ஏமாற்றம் அடைந்துள்ளார்கள்.
ஹரியை மீண்டும் ராஜ குடும்பத்துக்குள் அனுமதிக்கமாட்டேன்
இதற்கிடையில், ஹரியை மீண்டும் ராஜ குடும்பத்துக்குள் அனுமதிப்பதில்லை என்பதில் இளவரசர் வில்லியம் உறுதியாக இருப்பதாக ராஜ குடும்ப நிபுணரான Michael Cole தெரிவித்துள்ளார்.
ஹரி, தன் குடும்பத்தினரைக் குறித்து தனது சுய சரிதைப் புத்தகத்தில் மோசமாக விமர்சித்திருந்தார். குறிப்பாக இளவரசி கேட் குறித்து அவர் குறிப்பிட்டிருந்த விடயங்கள் வில்லியமுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளன.
அதேபோல, வில்லியமும் ஹரியின் மனைவியான மேகனை விமர்சித்துள்ளார். அது ஹரிக்கு பிடிக்கவில்லை.
ஆக மொத்தத்தில், யார் ஆசைப்பட்டாலும் சரி, ஹரியை மீண்டும் ராஜ குடும்பத்துக்குள் அனுமதிப்பதில்லை என இளவரசர் வில்லியம் அடம்பிடிப்பதாக தெரிவித்துள்ளார் Michael Cole.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |