மாணவி மரணத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும்.. பிரபல நடிகரின் குரல்!
கள்ளக்குறிச்சி உயிரிழந்த பள்ளி மாணவியின் மரணத்திற்கு நீதி கிடைக்க ஒன்று சேர்வோம் என பிரபல நடிகர் ஹரிஷ் கல்யாண் தெரிவித்துள்ளார்.
பள்ளி மாணவியின் மர்ம மரணம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் இதுதொடர்பாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பிரபல தமிழ் நடிகர் ஹரிஷ் கல்யாண் தனது ட்விட்டர் பக்கத்தில், 'அவரது மரணத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று நம்புகிறேன். கரம் கோர்ப்போம் நீதிக்கு' என பதிவிட்டுள்ளார்.
#JusticeForSrimathi #Kallakuruchi
— Harish Kalyan (@iamharishkalyan) July 17, 2022
I hope whoever is responsible for her death is held accountable.
கரம் கோர்ப்போம் நீதிக்கு.
அவரது இந்த பதிவிற்கு பலரும் ஆதரவு தெரிவித்து ரீட்வீட் செய்து வருகின்றனர். முன்னதாக, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மகளை பிரிந்து வாடும் மாணவியின் பெற்றோருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும், தவறிழைத்தவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தர வலியுறுத்துவதாகவும் தெரிவித்தார்.