ஹரியும் மேகனும் எங்கள் குடும்பத்தினர்கள்தான்... ஓபராவா அது யார்? பேட்டியா என்ன பேட்டி: கலாய்த்த இளவரச தம்பதியர்
ஓபராவுடனான ஹரி மேகனின் அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சி குறித்து இளவரசர் எட்வர்ட் மற்றும் இளவரசி சோபியிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, சரியாக அதை நக்கலடித்துள்ளார்கள்.
இளவரசர் எட்வர்ட் அவரது மனைவி சோபி ஆகியோர் முதன்முறையாக பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்தார்கள். அப்போது, அவர்களிடம் ஓபராவுடனான ஹரி மேகனின் அமெரிக்க தொலைக்காட்சி பேட்டி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
ஓபராவா, அது யார், பேட்டியா, அது என்ன பேட்டி என்ன பேட்டி, என கலாய்த்துத் தள்ளி, விழுந்து விழுந்து சிரித்துள்ளார்கள் இருவரும். பிறகு சீரியஸாக பேசிய இருவரும், என்ன நடந்தாலும் நாங்கள் எல்லாரும் ஒரு குடும்பத்தினர்தான், எப்போதும் நாங்கள் அப்படியேதான் இருப்போம் என்றும் கூறியுள்ளார்கள்.
ஹரி மேகனின் ஓப்ரா வின்ஃப்ரேயுடனான பேட்டி ராஜ குடும்பத்துக்குள்ளும், பிரித்தானிய மக்களிடையேயும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதற்குப் பின்பும் இளவரசர் எட்வர்டும் சோபியும் இப்படி பதிலளித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இளவரசர் பிலிப் இறுதிச்சடங்கிற்குப்பின், தான் நீண்ட நேரம் இளவரசர் ஹரியுடன் பேசிக்கொண்டிருந்ததாக்வும் தெரிவித்துள்ளார் சோபி.