இளவரசி கேட் புற்றுநோய் அறிதலுக்கு பின் ஹரி, மேகன் பிரித்தானிய வருகை..திட்டங்கள் எதுவும் இல்லை என தகவல்
பிரித்தானியாவுக்கு ஹரி மற்றும் மேகன் வருகை தரவுள்ளதாக கூறப்படும் நிலையில், உறவுகளுக்குள் நல்லிணக்க திட்டங்கள் எதுவும் இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானிய வருகை
வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் தனது புற்றுநோய் குறித்து வெளியிட்ட வீடியோ பதிவு பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து ஹரி, மேகன் தம்பதி வெள்ளிக்கிழமை இரவு வில்லியம் மற்றும் கேட் உடன் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டதாக நம்பப்படுகிறது.
ஆனால் அது தொலைபேசி வாயிலாக அல்லது வீடியோ அழைப்பா என்று தெளிவாக தெரியவில்லை.
கடைசியான சந்திப்பு
இந்த நிலையில் மே மாதம் இளவரசர் ஹரி, மேகன் தம்பதி பிரித்தானியாவுக்கு வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த வருகையின்போது கேட் மற்றும் அரச குடும்பத்துடன் சமரசத்திற்கான எந்த திட்டமும் இருக்காது என்றும் கூறப்படுகிறது.
2022ஆம் ஆண்டு செப்டம்பரில் கேட் தனது துணையுடன் விண்ட்சரில், இளவரசர் ஹரி மற்றும் மேகனை கடைசியாக சந்தித்தார்.
கேட் தனது புற்றுநோய் குறித்த செய்தியை வெளியிட்ட சில மணிநேரங்களுக்குப் பின், ஹரி மற்றும் மேகன் தம்பதி ஒரு சிறிய அறிக்கையை வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |